சிலுவையின் நிழலில் அனுதினம் அடியான் | |
சிலுவையின் நிழலில் அனுதினம் அடியான் சாய்ந்திளைப்பாறிடுவேன் - ஆ! ஆ! சிலுவை அன்பின் மறைவில் கிருபையின் இனிய நிழலில் ஆத்தும நேசரின் அருகில் அடைகிறேன் ஆறுதல் மனதில் 1. பாவப் பாரச் சுமையதால் சோர்ந்தே தளர்ந்த என் ஜீவியமே – ஆ! ஆ! சிலுவையண்டை வந்ததினால் சிறந்த சந்தோஷங் கண்டதினால் இளைப்படையாது மேலோகம் ஏகுவேன் பறந்தே வேகம் 2. இன்பம் சுரந்திடும் திருமொழி கேட்டேன் இன்னல்கள் மறந்திடுவேன் - ஆ! ஆ! திருமறை இன்னிசை நாதம் தேனிலு மினிய வேதம் தருமெனக்கனந்த சந்தோஷம் தீர்க்குமென் இதயத்தின் தோஷம் 3. எவ்வித கொடிய இடருக்கு மஞ்சேன் இயேசுவைச் சார்ந்து நிற்பேன் - ஆ! ஆ! அவனியில் வியாகுலம் வந்தால் அவரையே நான் அண்டிக்கொண்டால் அலைமிக மோதிடு மந்நாள் ஆறுதல் அளிப்பாரே சொன்னால் |
lyrics
Monday, June 8, 2015
Siluvaiyin Nilalil Anuthinam adiyan
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment