Wednesday, March 4, 2020

SUVISHESAM SONNA THAAN

சுவிசேஷம் சொன்னா தான் உனக்கு புண்ணியம்
சுவிசேஷம் சொல்லாவிட்டா உனக்கு ஐயோ-2
சும்மா இருக்காதே சோம்பேறி ஆகாத
சிலுவை சுமந்திடு சும்மா சீறி எழும்பிடு-2-சுவிசேஷம்

வருஷத்துக்கு ஒரு ஆத்துமாவ ஆதாயம் செஞ்சியா
இல்ல வாழ்நாள் எல்லாம் வீணாகவே உக்காந்து இருக்கியா

சும்மா இருக்காதே சோம்பேறி ஆகாத
சிலுவை சுமந்திடு சும்மா சீறி எழும்பிடு-2-சுவிசேஷம்

பாவத்துல இருக்கும் ஆத்துமாவுக்கு பரிதாபப்படிறியா
இல்ல பணம் பணம் பணம்னு பணத்துக்காக
பைத்தியம் போல் அலையுறியா

சும்மா இருக்காதே சோம்பேறி ஆகாத
சிலுவை சுமந்திடு சும்மா சீறி எழும்பிடு-2-சுவிசேஷம்

காணாமல் போன ஆட்டைத்தேடி ஆட்களை அனுப்புனியா
இல்ல காணிக்கைக்காக கல் நெஞ்சம் படைத்த
கயவனைப்போல் இருக்கியா

சும்மா இருக்காதே சோம்பேறி ஆகாத
சிலுவை சுமந்திடு சும்மா சீறி எழும்பிடு-2-சுவிசேஷம்

SILUVAIYIL MAANTA YESUVE ENRUM

சிலுவையில் மாண்ட இயேசுவே என்றும் உன் தஞ்சம்
சிந்தனை செய்து சீக்கிரம் அவரண்டை வந்திடுவாய்
நாள்தோறும் நடத்திடுவார்
உன்னை நாதன் காத்திடுவார்
நேர்வழி சென்று புது ஜீவன் கண்டு |
சார்ந்திட அவரை நம்பிடுவாய் | 2

பாவத்தில் ஜீவிப்பவர்
பாதாளம் சென்றிடுவார்
நீயோ உன் நேசர் இயேசுவின் சாந்த |
வார்த்தையை நம்பி வந்திடுவாய் | 2

ஏன் இந்த வேதனையோ
இனி நீங்கி வான்ழ்ந்திடாயோ
இயேசு சுமந்தார் யாவும் உனக்காய் |
சிந்தினார் இரத்தம் வந்திடுவாய் | 2

SATHIYA VEDATHAI DINAM THIYANI

சத்திய வேதத்தைத் தினம் தியானி
சகல போர்க்கும் அதபிமானி
உத்தம ஜீவிய வழிகாட்டும்
உயர்வானுலகில் உனைக்கூட்டும்

வாலிபர் தமக்கூண் அதுவாகும்
வயோதியர்க்கும் அதுணவாகும்
பாலகர்க்கினிய பாலும் அதாம்
படிமீ தாத்மபசி தணிக்கும்

சத்துருப் பேயுடன் அமர்புரியும்
தருணம் அதுநல் ஆயுதமாம்
புத்திரர் மித்திரரோடு மகிழும்
பொழுதும் அதுநல் உறவாகும்

புலைமேவிய மானிடரிதயம்
புனிதம் பெறுதற்கதுமருந்தாம்
நிலையா நரர்வாணாள் நிலைக்க
நேயகாய கற்பம் அதாம்

கதியின் வழி காணாதவர்கள்
கண்ணுக்கரிய கலிக்கம் அது
புதிய எருசாலேம்பதிக்குப்
போகும் பயணத்துணையும் அது

Tuesday, March 3, 2020

SAMAATHAANAM NALKUM NAAMAM

சமாதானம் நல்கும் நாமம் இயேசு நாமமே 
மனச்சாந்தி தரும் இனிய நாமம் இயேசு நாமமே
இயேசு நாமமே, இயேசு நாமமே 
கிறிஸ்தேசு நாமமே (2)

1. அன்னை தந்தை சொந்தம் யாவும் இயேசு நாமமே
தன்னை தந்த இன்ப நாமம் இயேசு நாமமே

2. பாவமற கழுவும் நாமம் இயேசு நாமமே 
உயர் பக்திதனை வளர்க்கும் நாமம் இயேசு நாமமே

3. பாவ இருள் போக்கும் நாமம் இயேசு நாமமே 
ஜீவ ஒளி வீசும் நாமம் இயேசு நாமமே

4. பொன் வெள்ளி புகழ் பொருளும் இயேசு நாமமே 
என் உள்ளில் வாழும் ஏசு நாமம் இயேசு நாமமே

KIRISTHUVUKKUL VAZHUM ENAKKU

கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு
எப்போதும் வெற்றி உண்டு

வெற்றி உண்டு வெற்றி உண்டு

என்னென்ன துன்பம் வந்தாலும்
நான் கலங்கிடவே மாட்டேன்
யார் என்ன சொன்னாலும்
நான் சோர்ந்து போகமாட்டேன்

என் ராஜா முன்னே செல்கிறார்
வெற்றி பவனி செல்கிறார்
குருத்தோலை கையில் எடுத்து
நான் ஓசன்னா பாடிடுவேன்

சாத்தானின் அதிகாரமெல்லாம்
என் நேசர் பறித்துக் கொண்டார்
சிலுவையில் அறைந்து விட்டார்
காலாலே மிதித்து விட்டார்-இயேசு

பாவங்கள் போக்கிவிட்டார்
சாபங்கள் நீக்கி விட்டார்
இயேசுவின் தழும்புகளால்
சுகமானேன் சுகமானேன்

மேகங்கள் நடுவினிலே
என் நேசர் வரப்போகிறார்
கரம்பிடித்து அழைத்துச் செல்வார்
கண்ணீரெல்லாம் துடைப்பார்

KARIRULIL EN NAESA THEEPAMAE

1. காரிருளில் என் நேச தீபமே நடத்துமேன்
வேறொளியில்லை வீடும் தூரமே நடத்துமேன்
நீர் தாங்கின் தூரக்காட்சி ஆசியேன்
ஓர் அடி மட்டும் என் முன் காட்டுமே

2. என் இஷ்டப்படி நடந்தேன் , ஐயோ! முன்னாளிலே
ஒத்தாசை தேடவில்லை இப்போதோ நடத்துமேன்
உல்லாசம் நாடினேன் திகிலிலும்
வீம்பு கொண்டேன் அன்பாக மன்னியும்

3. இம்மட்டும் என்னை ஆசீர்வதித்தீர் , இனிமேலும்
காடாறு சேறு குன்றில் தேவரீர் நடத்திடும்
உதய நேரம் வரக் களிப்பேன்
மறைந்து போன நேசரைக் காண்பேன்

GALEELIYA KADALORAM

கலிலேயா கடற்கரையோரம்
ஓர் மனிதர் நடந்து சென்றார்
அவர்தான் இயேசு இரட்சகர்
உன் பாவத்தைப் போக்கும் உத்தமர்


1.காரிருள் சூழ்ந்தாலும் பெருங்கவலைகள்
தொடர்ந்தாலும் கண்ணீர் வடித்தாலும்
பெரும் கலக்கங்கள் பிடித்தாலும்
கர்த்தரின் குரல் உன்னை அழைக்கிறது
உன் கவலையை மாற்றிட துடிக்கிறது


நெஞ்சமே நினைத்திடு அவர்
அன்பினை ருசித்திடு


2.நண்பர்கள் பகைத்தாலும் – இந்த
நானிலம் வெறுத்தாலும்
பெற்றோர்கள் மறந்தாலும் உன்
உற்றார்கள் பிரிந்தாலும்
நாயகர் இயேசு உன்னை அறிந்திடுவார் – அவர்
நமையினால் வழி நடத்திடுவார் – நெஞ்சமே


3.ஏன் இந்த வேதனைகள்
என்று ஏங்கிடும் மனிதர்களே
என் இயேசுவின் போதனையை
ஏன் இன்று மறந்தீர்களோ
வேதனை தீர்த்திடும் வேந்தனவர் – மன
பாரத்தை போக்கிடும் தேவனவர் – நெஞ்சமே