Thursday, September 10, 2015

YESU KRISHTHU MAARAATHAVARE

இயேசு கிறிஸ்து மாறாதவரே
மாறாதவரே மாறாதவரே
ஆமாம் இயேசு கிறிஸ்து மாறாதவரே
நித்திய நித்தியமாய்
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

YESU KRISTHUVIN NAL SEEDARAGUVOM

1. இயேசு கிறிஸ்துவின் நல் சீடராகுவோம்
விசுவாசத்தில் முன் நடப்போம்
இனி எல்லோருமே அவர் பணிக்கெனவே
ஒன்றாய் எந்நாளும் உழைத்திடுவோம்

நம் இயேசு இராஜாவே இதோ வேகம் வாராரே
அதி வேகமாய் செயல்படுவோம்

2. மனிதர் யாரிடமும் பாசம் காட்டுவோம்
இயேசு மந்தைக்குள் அழைத்திடுவோம்
அதி உற்சாகமாய் அதி சீக்கிரமாய்
இராஜ பாதையைச் செவ்வையாக்குவோம்

நம் இயேசு இராஜாவே இதோ வேகம் வாராரே
அதி வேகமாய் செயல்படுவோம்

3. சாத்தானின் சதிகளைத் தகர்த்திடுவோம்
இனி இயேசுவுக்காய் வாழ்ந்திடுவோம்
இந்தப் பார் முழுவதும் இயேசு நாமத்தையே
எல்லா ஊரிலும் எடுத்துரைப்போம்

நம் இயேசு இராஜாவே இதோ வேகம் வாராரே
அதி வேகமாய் செயல்படுவோம்

4. ஆவி ஆத்துமா தேகம் அவர் பணிக்கே
இனி நான் அல்ல , அவரே எல்லாம்
என முடிவு செய்தோம் அதில் நிலைத்திருப்போம்
அவர் நாளினில் மகிழ்ந்திடுவோம்

நம் இயேசு இராஜாவே இதோ வேகம் வாராரே
அதி வேகமாய் செயல்படுவோம்

YESUVIN KUDUMBAM ONDRU UNDU

இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு
அன்பு நிறைந்திடும் இடம் உண்டு (2)

1. உயர்வுமில்லை அங்கு தாழ்வுமில்லை
ஏழை இல்லை பணக்காரனில்லை
இராஜாதி இராஜா இயேசு
என்றென்றும் ஆண்டிடுவார் --- இயேசுவின்

2. பாவமில்லை அங்கு சாபமில்லை
வியாதியில்லை கடும் பசியுமில்லை
இராஜாதி இராஜா இயேசு
என்றென்றும் காத்திடுவார் --- இயேசுவின்

3. இன்பம் உண்டு சமாதானம் உண்டு
வெற்றி உண்டு துதி பாடல் உண்டு
இராஜாதி இராஜா இயேசு
என்றென்றும் ஈந்திடுவார் --- இயேசுவின்

YESU RAAJANIN THIRUVADIKKU

இயேசு ராஜனின் திருவடிக்கு
சரணம் சரணம் சரணம்
ஆத்ம நாதனின் மலரடிக்கு
சரணம் சரணம் சரணம்

1. துன்ப துயரம் சூழும் வேளையும் - வெகு
கஷ்ட நஷ்டம் வரும் நாளிலும்
அன்பருக்கருள் தரும் இன்பமே
சரணம் சரணம் சரணம் --- இயேசு

2. ஆடுபோல் அடிக்கப்பட்டீரே - அன்பால்
தேடி எமை மீட்கவந்தீரே - எங்கள்
ஜீவ பலியாய் மாண்டீரே
சரணம் சரணம் சரணம் --- இயேசு

3. பெலவீனம் யாவும் போக்கும் வல்லோரே
பெலன் ஈந்து வலக்கரம் பிடிப்பீரே
ஆவி ஆத்மா சரீரத்தைப் படைக்கிறேன்
சரணம் சரணம் சரணம் --- இயேசு

YESU NESIKKIRAR YESU NESIKKIRAR

இயேசு நேசிக்கிறார் - இயேசு நேசிக்கிறார் ;
இயேசு என்னையும் நேசிக்க யான் செய்த
தென்ன மாதவமோ!

சரணங்கள்

1. நீசனாமெனைத்தான் இயேசு நேசிக்கிறார்,
மாசில்லாத பரன் சுதன்றன் முழு
மனதால் நேசிக்கிறார் --- இயேசு

2. பரம தந்தை தந்த பரிசுத்த வேதம்
நரராமீனரை நேசிக்கிறாரென
நவிலல் ஆச்சரியம் --- இயேசு

3. நாதனை மறந்து நாட்கழித் துலைந்தும்,
நீதன் இயேசெனை நேசிக்கிறாரெனல்
நித்தம் ஆச்சரியம் --- இயேசு

4. ஆசை இயேசுவென்னை அன்பாய் நேசிக்கிறார்;
அதை நினைந்தவர் அன்பின் கரத்துளெ
ஆவலாய்ப் பரப்பேன் --- இயேசு

5. ராசன் இயேசுவின் மேல் இன்ப கீதஞ் சொலில் ,
ஈசன் இயேசெனைத் தானெசித்தாரென்ற
இணையில் கீதஞ் சொல்வேன் --- இயேசு

EN NESAR VELLAI POLA SENDU

என் நேசர் வெள்ளைப் போளச் செண்டு
என் அன்பர் மரிக்கொழுந்து பூங்கொத்து
நான் அவர்க்குள் மலர்ந்து மணக்கும் ரோஜாவே
பள்ளத்தாக்கின் லீலி புஷ்பமே - நான் (2)

அருமையானவர் எந்தன் நேசர்
இன்பமானவர் ஆத்ம நேசர்
மதுரமானவர் எந்தன் நேசர்
பிரியமானவர் மதுரமானவர் - என் நேசர்

1. காட்டு மரங்களுக்குள்ளே கிச்சிலி
மரம் போல் ஆனவர் இவர்
கன்மலைக் குன்றின் வெடிப்பிலே
ஓடிவரும் மானுக்கு சமானமாவார் --- என்

2.வெண்மையும் சிவப்புமானவர்
புறாவின் கண்கள் கொண்டவர் அவர்
கேதுரு மரம்போல் ஆனவர்
பதினாயிரம் பேரில் சிறந்தவராவார் --- என்

YESU THANE ATHISAYA THEIVAM

இயேசு தானே அதிசய தெய்வம்
என்றும் ஜீவிக்கிறார் நம் தெய்வம்

சரணங்கள்

1. அதிசயமே அவர் அவதாரம்
அதிலும் இனிமை அவர் உபகாரம்
அவரைத் தெய்வமாகக் கொள்வதே பாக்கியம்
அவரில் நிலைதிருப்பதே சிலாக்கியம் --- இயேசு

2. இருவர் ஒருமித்து அவர் நாமத்திலே
இருந்தால் வருவார் இருவர் மத்தியிலே
அந்தரங்கத்தில் அழுது நீ ஜெபித்தால்
அவர் கரத்தால் முகம் தொட்டு துடைப்பார் --- இயேசு

3. மனிதன் மறு பிறப்படைவதவசியம்
மரித்த இயேசுவால் அடையும் இரகசியம்
மறையும் முன்னே மகிபனைத் தேடு
இறைவனோடு பரலோகம் சேரு --- இயேசு

4. ஆவியினால் அறிந்திடும் தெய்வம்
பாவிகளை நேசிக்கும் தெய்வம்
ஆவியோடு உண்மையாய் தொழுதால்
தேவசாயலாய் மாறி நீ மகிழ்வாய் --- இயேசு