Wednesday, April 16, 2025

Sthothiramae Sthothiramae Appa Appa ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே அப்பா அப்பா

 ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே அப்பா அப்பா

உம் கிருபை எனக்கு போது அப்பா அப்பா
வல்லவரே நல்லவரே வல்லவரே நல்லவரே

கர்த்தரே என் கன்மலையும் கோட்டையுமானார்
ரட்சகரும் தேவனுமானார் – நான்
நம்பின என் துருகமும் கேடகமானார்
ரட்சணிய கொம்புமானார்

தேவரீர் என் இருளையெல்லாம் வெளிச்சமாக்கினீர்
எனது விளக்கை ஏற்றி வைத்தீர் – ஒரு
சேனைக்குள்ளே பாயச்செய்து போரிடச் செய்தீர்
மதிலையெல்லாம் தாண்டிடச் செய்தீர்

உம்முடைய வலக்கரத்தால் என்னை தாங்கினீர் – உம்
காருணியத்தால் பெரியவனானேன்
நான் செல்லுகின்ற பாதையெல்லாம் அகலமாக்கினீர்
வழுவாமல் நடந்து செல்கிறேன்

No comments: