Monday, April 14, 2025

Vaarthaiyai Anuppiyae வார்த்தையை அனுப்பியே

 வார்த்தையை அனுப்பியே என் வாதையை போக்குமே

என் வேதனை உமக்கு புரிகின்றதா
என் வேண்டுதல் உம்மை அடைகின்றதா
என் சோகங்கள் என் காயங்கள்
உம் காலடி வருகின்றதா

வார்த்தையை அனுப்புவேன் உன் வாதையை போக்குவேன்
உன் வேதனை எனக்கு புரிகின்றதே
உன் வேண்டுதல் என்னை அடைகின்றதே
உன் சோகங்கள் உன் காயங்கள் நான் சிலுவையில் சுமந்துவிட்டேன்
என் பிள்ளையென்றால் சிட்சிக்கிறேன்
உன்னை சிட்சித்தப்பின் ரட்சிக்கிறேன்

No comments: