Friday, September 30, 2022

ARIYAATHATHUM ETTAATHATHUMANA PERIA KAARIYAM TAMIL LYRICS

அறியாததும் எட்டாததுமான
பெரிய காரியம் செய்திட்டார்
எண்ண முடியாததும்
நான் நினையாததுமான
பெரிய காரியம் செய்திட்டார்

என் தேவனால்
எல்லா நன்மை கிடைத்திடுதே
என் தேவனால்
நல்ல மேன்மை கிடைத்திடுதே
என் தேவனால்
பரிபூரணமடைந்திட்டேனே

கிருபையால் நான்
என்றும் ஜெயித்திடுவேன் - 2

சிங்கத்தின் வாயை கிழிக்கின்ற
வரம் தந்தார்
சத்துரு கோட்டையை தகர்க்கின்ற
ஞானம் தந்தார் - 2

என் தேவனால்
நான் சேனைக்குள் பாய்வேன்
என் தேவனால் நான் வென்றிடுவேன் - 2
கிருபையால் நான் தாண்டிடுவேன்
கிருபையால் நான் வென்றிடுவேன்
அவர் கிருபையால் நான் தாண்டிடுவேன்
அவர் கிருபையால் நான் வென்றிடுவேன்
அல்லேலூயா அல்லேலூயா - 2

ராஜாவின் பிள்ளையாய்
என்னை அவர் மாற்றினார்
தேவனின் ராஜ்ஜியத்தை
எனக்குள்ளே அவர் வைத்திட்டார் - 2
நித்திய ஜீவனை இரத்தத்தால் தந்தாரே
நீதிமானாய் என்னை மாற்றினாரே - 2
அவர் கிருபையால் நான் மீட்பு பெற்றேன்
அவர் கிருபையால் நான் நீதி பெற்றேன் - 2
அல்லேலூயா அல்லேலூயா - 2

தேவையெல்லாம் அவர் நிறைவாக சந்தித்தார்
ஐஸ்வர்யம் எல்லாம் எனக்காக வைத்திட்டார் - 2
பாலைவனம் கூட சோலையாய் மாறீற்றே
பொன்னின் மேல் நடக்கின்ற வாழ்வை தந்தார்
அவர் கிருபையால் நான் வாழ்வு பெற்றேன்
அவர் கிருபையால் நான் மேன்மை பெற்றேன் - 2
அல்லேலூயா அல்லேலூயா - 2
                                                                             - அறியாததும்

No comments: