1. யெகோவா ராஃப்பா சுகத்தை தருபவர்
வியாதிகள் இன்று எனக்கில்லையேயெகோவா ராஃப்பா என் பெலன் ஆனதால்
வாதை நோய்களும் எனக்கில்லையே
சிலுவையில் எனக்காய் ஜீவனை தந்ததால்
எகிப்தின் ரோகங்கள் எனக்கில்லையே
மரணத்தை ஜெயித்து உயிரோடு எழுந்ததால்
மரண பயமும் எனக்கில்லையே
உம்மை நம்புவோர்க்கு பயமில்லையே
உம்மை தேடுவோர்க்கு குறையில்லையே-2
2. யெகோவா ஷாலோம் சமாதானம் தருபவர்
கரங்கள் பிடித்தென்னை நடத்துவாரே
யெகோவா ரூவா என் நல்ல மேய்ப்பராய்
அமர்ந்த தண்ணீரண்டை நடத்துவாரே
யெகோவாயீரே எல்லாம் தருபவர்
என்னை போஷிக்க வல்லவரே
ஈசாக்கின் விதையை ஆசீர்வதிப்பவர்
நூறு மடங்காய் நிரப்புவாரே
உம்மை நம்புவோர்க்கு பயமில்லையே
உம்மை தேடுவோர்க்கு குறையில்லையே-2
No comments:
Post a Comment