Saturday, August 13, 2022

IRUMANAM ONDRAGA MARUVATHE

 இருமனமும் ஒருமனமாக மாறுவதே திருமணமே

இருவருமே இனி ஒருவராக கர்த்தருக்குள் என்றும் வாழுவோமே
நேரமும் வந்தது காலமும் வந்தது
உன்னையும் என்னையும் சேர்த்திடவே
கர்த்தர் நினைத்தது காலமும் மாறாது
நீயும் நானும் வாழுவோமே - இருமனமும்

மாம்சத்தில் மாம்சமாக எலும்பில் எலும்பாக
எனது பாதி ஆனாளே
நன்மையிலும் தீமையிலும் வாழ்விலும் தாழ்விலும்
உன்னை என்றும் நேசிப்பேனே
இன்பத்திலும் துன்பத்திலும் வியாதி வறுமையிலும்
உன்னை என்றும் நேசிப்பேனே
மரணம் நம்மை பிரிக்கும் அளவுக்கும்
எல்லா நிலையிலும் நேசிப்பேனே - இருமனமும்

No comments: