Monday, October 28, 2019

MATHA UN KOVILIL MANIDEEPAM

மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்
தாய் என்று உன்னைத் தான் – 2
பிள்ளைக்குக் காட்டினேன் மாதா 


மேய்ப்பன் இல்லாத மந்தை வழிமாறுமே – 2
மேரி உன் ஜோதி கொண்டால் விதிமாறுமே
மெழுகுபோல் உருகினோம் கண்ணீரை மாற்ற வா – மாதா 

காவல் இல்லாத ஜீவன் கண்ணீரிலே – 2
கரை கண்டிலாத ஓடம் தண்ணீரிலே
அருள்தரும் திருச்சபை மணியோசை கேட்குமோ – மாதா 

பிள்ளை பெறாத பெண்மை தாயானது – 2
அன்னை இல்லாத மகனைத் தாலாட்டுது
கர்த்தரின் கட்டளை நான் என்ன சொல்வது – மாதா

No comments: