Monday, October 28, 2019

NEER THAN ENNAI AALUM THAGAPPAN

நீர் தான் என்னை ஆளும் தகப்பன்
என்னோடு என்றும் வாழும் தகப்பன் (2)
எனக்குள்ளே வாழும் கிறிஸ்து அவர் என்னை உயர்த்திட உதவும் ஆவி அவர் (2)

சிறந்தவர் உயர்ந்தவர்
அவர் என்றென்றும் அன்பானவர்

அணைத்திட்டாரே அரவணைத்திட்டாரே அளவில்லா அன்பு கூர்ந்தார்
உயர்த்திட்டாரே கரம் பிடித்திட்டாரே
குறையில்லா கிருபை தந்தார்
கையோடு கை சேர்த்து நடப்பவர்
என்னை மார்போடு அணைத்திட்டாரே (2)

பார்த்திருந்தேன் முகம் பார்த்திருந்தேன்
வெளிச்சமாய் எனை மாற்றினார்
செவி கொடுத்தார் அன்பால் செவி கொடுத்தார்
குறைவெல்லாம் நிறைவாக்கினார்
உலகத்தை ஜெயிடத்திடும் பெலன் தந்தார்
அவர் என்னுள்ளே வாசமானார் (2)

சிறந்தவர் உயர்ந்தவர்
அவர் என்றென்றும் அன்பானவர்

No comments: