Wednesday, December 11, 2019

VALUVAMAL ENNAI KAATHIDUM

வழுவாமல் என்னை காத்திடும்
அழகான தேவன் நீரே (2)

வானம் மேலே பூமியின் கீழே
அளந்து விட்டாலும்
உம் அன்பை அளக்க என்னால்
இன்றும் முடியவில்லையே (2)

அன்பே உம்மை ஆராதிப்பேன்
கிருபையை உம்மை ஆராதிப்பேன் (2)

1.தீமைகளெல்லாம்
நீர் நன்மையாய் மற்றினீர்
உந்தன் அன்பு சிறந்தது (2)
இடராமல் காத்து கொண்டீர்
கண் உறங்காமல் பாதுகாத்தீர் (2) - அன்பே

2.அக்கினியில் நடந்தேன்
நான் ஆறுகளை கடந்தேன்
உந்தன் அன்பு காத்ததே (2)
என்னோடு என்றும் இருந்தீர்
என் வாழ்வோடு என்றும் இருப்பீர் (2) - அன்பே

No comments: