Wednesday, December 11, 2019

MAARANUM MANAM MAARANUM

மாறணும் மனம் மாறணும்
மனம் இன்றே மாறணும்
அலை பாய்ந்திடும் மனம் மாறணும்
தடுமாறியே சிறையாகிடும்
மனம் இன்றே மாறணும்
அடியோடு மாறணும்
மனம் மனம் கல்மனம் மாறணும்
வக்கிர சிலைகளை ஓழிக்கணும்
ஆவியின் அலை புரண்டோடணும்
சத்திய வசனம் பதிக்கணும்
கனிந்த இதயம் காணணும்!

1. சத்திய ஒளிப் பார்வையில்
தன் நிலை உணரனும்
பரமனுக்கெதிராய் செய்த குற்றம்
ஒப்புக்கொள்ளணும் – 2
திருமகன் சிலுவை பிராயச்சித்தம்
சொந்தம் கொண்டாடனும்
பிதா வழங்கும் மன்னிப்பை
ஆரத் தழுவணும் – அவர்
அன்புக்குச் சரணாகணும்!

2. ஆவியின் தின ஊட்டத்திலே
தனிவேறாய் துலங்கணும்
ஜெப வசனப் பயிற்சியினால்
திருவார்ப்பாய் மாறணும் – 2
பூரண வெற்றிப்பாட்டாக
வாழ்வைத் தொடரணும்
கிறிஸ்துவின் தூய அடிச்சுவட்டில்
நித்தம் பின் செல்லணும்
புகழ் ஆராதனை செய்யணும்!

3. தேவ அன்பினில் அசைவின்றி
நிலை உறுதி காக்கணும்
சகமனிதருடன் நல்லுறவை
கட்டியெழுப்பணும் – 2
தூய ஆவியின் மெருகேற்றம்
இயேசுவைக் காட்டணும்
தேவன் அழைத்த பந்தயத்தின்
இலக்கை அடையணும்
என்றும் பரலோகம் பூரிக்கணும்!

No comments: