Thursday, December 5, 2019

KARTHTHAATHI KARTHTHAAVAE DEVA NAAN

கர்த்தாதி கர்த்தாவே
தேவா நான் தினம் வாழ
வருவாயே திரு நாயகா
வரம் தருவாயே
திரு நாயகா

எனைச் சூழும் துன்பங்கள்
கணையாக வ்ரும் போது
துணையாக இருந்தவரே
மன நோயால் நான் மூழ்கி
மடிகின்ற பொழுதங்கு
எனை மீட்ட மன்னவரே

எனை உமதாக்கி அருள்வாயப்பா
உலகெல்லாம் இருளாகி
உடனுள்ளோர் சென்றாலும்
வழிகாட்டும் ஒளியானவா
நீர்தானே எனக்கெல்லாம்
நினைவெல்லாம் நீர்தானே
நாதா உன் புகழ்பாடுவேன் – எனை
நாளெல்லாம் நீ ஆளுவாய்

No comments: