Tuesday, December 3, 2019

KALVAARI ARGIL VAAREER

கல்வாரிக்கருகில் வாரீர்
கூடிச்சேருவீர் ஒன்றாகத் தேடிச் செல்லுவீர்
உள்ளத்தில் இயேசுவின் பால்
அன்பு கொண்டோர் யாரும் கூடுவீர்
கல்வாரிக்கருகில் கூடுவீர்

1. சிறுவர் நடுவர் முதுவர் யாவரும் சேர்ந்து கூடட்டும்
உள்ளம் மட்டும் ஒரு எண்ணத்தால் பொருந்தி நிற்கட்டும்
துதியின் கீதம் எழுப்பி ஒன்றாய்ப் பாடிச் செல்லட்டும்
அந்தகார சக்தி யாவும் அசைந்து ஒழியட்டும் – ஆகையால்

2. கல்வாரிக் கருகில் வந்தோர் அன்பால் நிறைவார்
விகற்பமின்றி எவரிடமும் சீராய்ப் பழகுவார்
அன்பு நெருக்கி ஏவ அவர் சேவை செய்வார்
கல்வாரியில் அன்பை அன்றி யாது காணுவாய்? – ஆகையால்

3. இயேசுவை அறியார் உலகில் நிலவும் நாள் மட்டும்
மிஷனெரிகள் என்ற வார்த்தை பேசப்படட்டும்
தியாகம் புரிவோர் மேலும் மேலும் எழும்பி வரட்டும்
இயேசுவின் உள்ளம் அதனால் ப10ரிப்பாகட்டும் – ஆகையால்

No comments: