Thursday, December 19, 2019

IRAIVAN THANTHA VARTHTHAI

இறைவன் தந்த வார்த்தை
இயேசுவின் வடிவானதே – அவர்
பேசும் எந்த சொல்லும்
வாழ்வின் வழியானதே

சரணங்கள்

1. யாவீரு மகளான சிறுமியும்
நாயீனூர் விதவையின் மைந்தனும்
லாசரு எனும் ஓர் நண்பனும்
உயிரோடு எழுந்திட உதவினார்
ஒளியும் வாய்மையும் இயேசுவே
வழியும் வாழ்வும் இயேசுவே – இறைவன்

2. தொழு நோய் கொடுமைகள் தீரவே
அழிவின் பேய்கள் ஓடவே
உடலின் குறைகள் மாறவே
இறைவன் இயேசு உதவினார்
ஒளியும் வாய்மையும் இயேசுவே
வழியும் வாழ்வும் இயேசுவே – இறைவன்

No comments: