Thursday, December 19, 2019

ALAIKUM SATHAM KETKALAIYO

அழைக்கும் சத்தம் கேட்கலையோ
அழைக்கும் இயேசுவை பார்க்கலையோ
அனு
மழைக்கும் ஆழிக்கும் மேலானவர்
தழைக்கும் விருட்சத்தின் கருவானவர் – அவர

சரணங்கள்

1. காணாத ஆட்டை தேடினவர்
கானகத்தில் குளிர் நீரானவர்
மலைக்கும் நடுவில் நீர் உண்டு பண்ணி (2)
மலைக்கும் விதமாய் இரட்சித்தவர் (2) – அவர்

2. குஷ்டரோகியைக் குணமாக்கினவர்
கஷ்ட நோய்களை எல்லாம் நீக்கினவர்
துஷ்டனாய் நடந்த சவுல் என்ற நபரை (2)
இஷ்டமாய் பவுலாய் மாற்றியவர் (2) – அவர்

3. சீஷர்கள் கால்களைக் கழுவினவர்
பாசமாய் சிறுவரை நேசித்தவர்
நீசராம் நம்மை திருத்திட எண்ணி (2)
கசையடி வசை மொழி ஏற்றிட்டவர் (2) – அவர்

4. வருந்திய மக்களை மகிழ்வித்தவர்
திருந்திய மக்களை இரட்சித்தவர்
வேதனையோடு தொங்கிய போதும் (2)
வேதனை செய்தவரை மன்னித்தவர் (2) – அவர்

No comments: