Saturday, November 9, 2019

YESU ENTHANODIRUPATHINAAL ETHUVUM ENNAI

இயேசு எந்தனோடிருப்பதால்
எதுவும் என்னை அசைப்பதில்லை
வாக்குத்தத்தம் செய்திருப்பதால்
வாழ்க்கையிலே பயமுமில்லை

இயேசுவே இயேசுவே
உமக்கே ஆராதனை
உமக்கே ஆராதனை

தாயின் கருவில் தோன்றும் முன்னே
தயவாலே முன் குறித்தீர்
உள்ளங்கையில் வரைந்திட்டீரே
உம் பிள்ளையாக மாற்றினீரே

துக்கத்தால் நான் கலங்கும்போது
தோல்விகளின் மத்தியிலே
தோழனாக தோல் கொடுத்தீர்
தாயைப் போல் தேற்றினீரே

சத்துருக்கள் முன்பாக
பந்தியை நீர் ஆயத்தம் செய்தீர்
என் தலையை உயர்த்தினீரே
தலைக்குனிவு எனக்கில்லையே

No comments: