Saturday, November 9, 2019

IRANGUM IRANGUM KARUNAIVAARI

இரங்கும் இரங்கும் கருணைவாரி, 
ஏசு ராசனே, – பவ – நாசநேசனே!

திரங்கொண்டாவி வரங்குண்டுய்யச் 
சிறுமை பார் ஐயா, – ஏழை வறுமை தீர், ஐயா – இரங்கும்

அடியேன் பாவக் கடி விஷத்தால் 
அயர்ந்து போகிறேன், – மிகப் பயந்து சாகின்றேன் – இரங்கும்

தீமை அன்றி வாய்மை செய்யத் 
தெரிகிலேன் ஐயா, – தெரிவைப் புரிகிறேன், ஐயா – இரங்கும்

பாவி ஏற்றும் கவி மன்றாட்டைப் 
பரிந்து கேள் ஐயா, – தயை – புரிந்து மீள், ஐயா – இரங்கும்

No comments: