Monday, November 11, 2019

JEBA SINTHAI ENIL THAARUM DEVA

ஜெப சிந்தை எனில் தாரும், தேவா – என்னை 
அனுபல்லவி
அபயமென் றுனக் குக்கை
அளித்தேன் பொற்பாதா — ஜெப 

சரணங்கள்

1. உண்மை மனதோ டுன்னைக் கெஞ்ச – உல
கெண்ண மெல்லாம் அகற்றி உரிமையே மிஞ்ச,
தொன்மை ஆயக்காரன் போலஞ்ச – பவ 
தோஷமகலத் திருரத்தம் உள்ளிஞ்ச — ஜெப 

2. இடைவிடாமல் செய்யும் எண்ணம் – என் 
இதயத்தில் உதயமாய் இலங்கிடப் பண்ணும்,
சடமுலகப் பேயை வெல்லும் – நற் 
சாதக முண்டாகத் தயைசெய் என்னுள்ளம் — ஜெப

3. ஊக்கமுடன் ஜெபம் செய்ய – தகா 
நோக்க மெல்லாம் கெட்டு நொறுங்கியே நைய,
பேய்க்கண மோடுபோர் செய்ய – நல்
ஆக்கம் எனில் தந்து ஏக்கம் தீர்ந்துய்ய — ஜெப

No comments: