Monday, November 11, 2019

DEVA PITHA ENTHAN MEIPPAN ALLOW

தேவ பிதா என்றன் மேய்ப்பன் அல்லோ,
சிறுமை தாழ்ச்சி அடைகிலனே .

அனுபல்லவி 

ஆவலதாய் எனைப் பைம்புன் மேல் 
அவர் மேயத் தமர் நீர் அருளுகின்றார்.- தேவ 

சரணங்கள் 

ஆத்துமந் தன்னைக் குளிரப்பண்ணி 
அடியேன் கால்களை நீதி என்னும்
நேர்த்தியாம் பாதையில் அவர் நிமித்தம் 
நிதமும் சுகமாய் நடத்துகின்றார். -தேவ 

சா நிழல் பள்ளத் திறங்கிடினும்,
சற்றும் தீங்குக் கண்டஞ்சேனே ;
வானபரன் என்னோடிருப்பார் ;
வளை தடியும் கோலுமே தேற்றும் .- தேவ 

பகைவர்க் கெதிரே ஒரு பந்தி 
பாங்காய் எனக்கென் றேற்படுத்திச் 
சுக தயிலம் கொண்டென் தலையைச் 
சுபமாய் அபிஷேகம் செய்குவார் ,-தேவ 

ஆயுள் முழுவதும் என் பாத்ரம் 
அருளும் நலமுமாய் நிரம்பும் ,
நேயன் வீட்டினில் சிறப்போடே ,
நெடு நாள் குடியாய் நிலைத்திருப்பேன் –தேவ

No comments: