Sunday, February 10, 2019

NANDRI PALI NANDRI PALI LYRICS


நன்றிபலி நன்றிபலி நல்லவரே உமக்குத்தான்
ஆனந்தம் ஆனந்தமே அப்பா உம் திருப்பாதமே

1. நேற்றைய துயரமெல்லாம் இன்று மறைந்ததையா
நிம்மதி பிறந்தையா நிரந்தரமானதையா
கோடி கோடி நன்றி டாடி (3)

2. இரவெல்லாம் காத்தீர் இன்னும் ஓர்நாள் தந்தீர்
மறவாத என் நேசரே உறவாடி மகிழ்ந்திடுவேன்

3. ஊழியப் பாதையிலே உற்சாகம் தந்தீரையா
ஓடிஓடி உழைப்பதற்கு உடல்சுகம் தந்தீரையா

4. வேதனை துன்பமெல்லாம்
ஒரு நாளும் பிரிக்காதையா
நாதனே உம் நிழலில்
நாள்தோறும் வாழ்வேனையா – இயேசு

5. ஜெபத்தைக் கேட்டீரையா
ஜெயத்தைத் தந்தீரையா
பாவம் அணுகாமலே பாதுகாத்து வந்தீரையா

6. புதிய நாள் தந்தீரையா
புது கிருபை தந்தீரையா
அதிசயமானவரே ஆறுதல் நாயகனே

7. என்நாவில் உள்ளதெல்லாம்
உந்தன் புகழ்தானே
நான் பேசி மகிழ்வதெல்லாம்
உந்தன் பெருமைதானே

No comments: