Thursday, February 14, 2019

JEBAME EN VAAZHVIN SEYALAGA LYRICS


ஜெபமே என் வாழ்வில் செயலாக மாற
ஜெப ஆவியால் என்னை நிறைத்திடுமே
ஜெபமின்றியே ஜெயமில்லையே
ஜெப சிந்தை எனில் தாருமே
1. இரவெல்லாம் ஜெபித்த என் தேவனே உம்
இதயத்தின் பாரம் என்னிலும் தாரும்
பொறுமையுடன் காத்திருந்தே
போராடி ஜெபித்திடவே
2. சோதனையணுகா விழிப்புடன் ஜெபிக்க
சோதனையதிலும் சோர்ந்திடா ஜெபிக்க
என் மாம்சத்தின் பெலவீனத்தில்
ஆவியின் பெலன் தாருமே
3. எந்த சமயமும் எல்லா மனிதர்க்கும்
பரிசுத்தவான்கள் பணிகள் பலனுக்கும்
துதி ஸ்தோத்திரம் ஜெபம் வேண்டுதல்
உபவாசம் எனில் தாருமே
4. முழங்காலில் நின்றே முழு மனதுடனே
விசுவாசம் உறுதியில் உண்மையாய் ஜெபிக்க
உம் வருகை நாளதிலே
உம்முடன் சேர்ந்திடவே

No comments: