Thursday, January 24, 2019

AAYIRAM AAYIRAM NANMAIGAL LYRICS


ஆயிரம் ஆயிரம் நன்மைகள்
அனுதினமும் என்னை சூழ்ந்திட
கிருபையும் இரக்கமும் அன்பும் கொண்டீரே
நல்ல எபிநேசராய் என்னை
நடத்தி வந்தீரே
நன்றி சொல்ல வார்த்தை இல்லை
1. காலை மாலை எல்லாம் வேளையிலும்
என்னை நடத்தும் உம் கரங்கள் நான் கண்டேன்
தேவை பெருகும் போது சிக்கி
தவித்திடாது உதவும் உம் கரங்கள் நான் கண்டேன்
எல்லா நெருக்கத்திலும் என்னை
விழாமல் காக்கும் அன்பின்
நல்ல கர்த்தரே
2. மரண பள்ளத்தாக்கில் நான் நடந்த வேளை
மிட்கும் உம் கரங்கள் நான் கண்டேன்
வாடி நின்ற வேளை மடிந்திடாது என்னை
தாங்கும் உம் கரங்கள் நான் கண்டேன்
எந்தன் மாராவின் வாழ்வை மதுரமாய் மாற்றும்
அன்பின் நல்ல கர்த்தரே

No comments: