Thursday, May 24, 2018

THOZHUGIROM ENGAL PITHAVE LYRICS


தொழுகிறோம் எங்கள் பிதாவே
பொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே
பரிசுத்த அலங்காரத்துடனே
தரிசிப்பதினால் சரணம் சரணம்
வெண்மையும் சிவப்புமானவர்
உண்மையே உருவாய்க் கொண்டவர் (2)
என்னையே மீட்டுக் கொண்டவர்
அன்னையே இதோ சரணம் சரணம் – தொழுகிறோம்
கண்கள் புறாக்கண்கள் போல
கன்னங்கள் பாத்திகள் போல (2)
சின்னங்கள் சிறந்ததாலே
எண்ணில்லாத சரணம் சரணம் – தொழுகிறோம்
அடியார்களின் அஸ்திபாரம்
அறிவுக்கெட்டாத விஸ்தாரம் (2)
கூடிவந்த எம் அலங்காரம்
கோடா கோடியாம் சரணம் சரணம் – தொழுகிறோம்
பாவிநேசன் பாவநாசன்
பரமபாதன் வரமே வாசன் (2)
துங்காசிங்கன் மங்காதங்கன்
துய்ய அங்கனே சரணம் சரணம் – தொழுகிறோம்
பார்த்திபனே கன தோத்திரம்
கீர்த்தனம் மங்களம் நித்தியம் (2)
வாழ்க வாழ்க வாழ்க என்றும்
அல்லேலூயா ஆமென் ஆமென் – தொழுகிறோம்

No comments: