Thursday, May 24, 2018

NEER THIRANTHAAL ADAIPAVANILLAI LYRICS


நீர் திறந்தால் அடைப்பவன் இல்லை
நீர் கட்டினால் அதை இடிப்பவன் இல்லை (2)
இல்லை இல்லை இல்லை
என் வாசலை அடைப்பவன் இல்லை
இல்லை இல்லை இல்லை
என்னை எதிர்ப்பவன் பூமியில் இல்லை (2)
1. கர்த்தரைப் போல பரிசுத்தமுள்ளவர்
பூமியில் இல்லையே
கர்த்தரைப் போல வல்லமையுள்ளவர்
பூமியில் இல்லையே (2)
பலவானின் வில்லை ஒடித்து
கீழேத் தள்ளுகிறார் (2)
தள்ளாடும் யாவரையும்
உயர்த்தி நிறுத்துகிறார் (2)
உயர்த்தி நிறுத்துகிறார் – இல்லை இல்லை
1. நாசியின் சுவாசத்தால் செங்கடலை
அவர் இரண்டாய் பிளந்தவராம்
பார்வோன் சேனையை தப்ப விடாமல்
கடலில் அழித்தவராம் (2)
மரண இருள் சூழ்ந்திடும் வேளையில்
பஸ்கா ஆட்டுக்குட்டி (2)
வாதை எங்கள் கூடாரத்தை
என்றும் அனுகாது (2)
என்றும் அனுகாது – இல்லை இல்லை
2. தேவனைத் துதிக்கும் துதியாலே
எரிகோ விழுந்தது
பவுலும் சிலாவும் துதித்த போது
சிறையும் அதிர்ந்தது (2)
துதியாலே சாத்தானை
கீழேத் தள்ளிடுவோம்
திறந்த வாசல் நம் முன்னே
கொடியை ஏற்றிடுவோம் (2)
கொடியை ஏற்றிடுவோம் – இல்லை இல்லை
நீர் திறந்தால் அடைப்பவன் இல்லை
நீர் கட்டினால் அதை இடிப்பவன் இல்லை (2) – இல்லை இல்லை

No comments: