இதயம் கொழுந்தாய் எரியும் போது
இயேசு என்னை இயக்கிடுவாரே
இல்லம் அன்பாய் நிறையும் போது
உன்னத தேவன் பேசிடுவாரே
எலியா போல எழும்பும் போது
தேசம் இன்றே மாறியே போகும்
கலங்கும் மக்கள் கதறும் போது
கர்த்தர் தூக்கி நிறுத்திடுவாதே
இயேசு மட்டும் தெய்வம் என்று
உலக மக்கள் அறிந்திட வேண்டும்
பாவம் சாபம் யாவும் நீங்க
பரிசுத்த இரத்தம் கழுவிட வேண்டும்
உம்மைப் போல நல்ல தெய்வம்
யாரும் இல்லை என்றும் இல்லை
உமக்கு ஒப்பாய் தேவனில்லை
கர்த்தர் நீரே உன்மை தேவன்
உலக மக்கள் அறிந்திட வேண்டும்
பாவம் சாபம் யாவும் நீங்க
பரிசுத்த இரத்தம் கழுவிட வேண்டும்
உம்மைப் போல நல்ல தெய்வம்
யாரும் இல்லை என்றும் இல்லை
உமக்கு ஒப்பாய் தேவனில்லை
கர்த்தர் நீரே உன்மை தேவன்
வானம் பூமி மாறினாலும்
தேவ வார்த்தை மாறுவதில்லை
பாதை எல்லாம் வெளிச்சமாகும்
வழிகள் எல்லாம் தீபங்களாகும்
வேதம் ஒன்றே வாழ வைக்கும்
வேதம் உன்னை உயர வைக்கும்
வல்லமை இறங்கும் வல்லமை இறங்கும்
பரிசுத்த ஆவியின் வல்லமை இறங்கும்
தேவ வார்த்தை மாறுவதில்லை
பாதை எல்லாம் வெளிச்சமாகும்
வழிகள் எல்லாம் தீபங்களாகும்
வேதம் ஒன்றே வாழ வைக்கும்
வேதம் உன்னை உயர வைக்கும்
வல்லமை இறங்கும் வல்லமை இறங்கும்
பரிசுத்த ஆவியின் வல்லமை இறங்கும்
No comments:
Post a Comment