Monday, May 7, 2018

CHANDIRANE SURIYANE KARTHARUKKU LYRICS


சந்திரனே சூரியனே
கர்த்தருக்கு கைத்தாளம் போடுங்க
வானங்களே பூமிகளே
கர்த்தருக்கு எக்காளம் ஊதுங்க
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
என துதிகள் பாடி நம்ம இயேசு ராஜவ துதியிங்க
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
என மகிழ்ந்து பாடி
வரம் தரும் கனி தரும் அருள் தரும் பெலன் தரும்
ஆவி தூய ஆவி எங்கள நிரப்பி தாருமே 
யோசேப்பை போல பயந்திடுவேன்
சாமுவேல் போல பேசிடுவேன்
தாவீதை போல ஆடிடுவேன்
தானியேல் போல ஜெபிப்பேன்
வானத்தின் நட்சத்திரமே
மேகத்தின் பனி மழையே
எப்போதுமே எந்நாளுமே
சாரோனின் ரோஜாக்கள் நாங்க
பரலோகத்தின் ராஜாக்கள் நாங்க 
கர்த்தருக்கு புது பாடல் பாடிடுவேன்
அவர் நல்லவர் வல்லவர் என்று
சொல்லி பாடுவேன்
ஆதியும் அவரே என் அந்தமும் அவரே
துள்ளி துள்ளி மகிழ்ச்சியோடு
கரங்கள் தட்டி ஆடி பாடி ஸ்தோதரிப்பேனே 
யோசுவா போல சென்றிடுவேன்
யூதா போல எழும்பிடுவேன்
ஈசாக்கை போல விதைத்திடுவேன்
சிம்சோன் போல கிழிப்பேன்
பள்ளத்தாக்கின் லீலியே
சாரோனின் ரோஜாவே
என்றென்றைக்கும் எந்நேரமும்
கர்த்தரின் கரத்தில் நாங்க
இயேசுவின் கரத்தில் நாங்க

No comments: