Monday, May 7, 2018

JORAA KAIYATHATTI PAADUNGA LYRICS


ஜோரா கையத் தட்டி பாடுங்க
இஸ்ரவேலின் பரிசுத்தர பாடுங்க (2)
துதிக்கு பாத்திரர் கனத்துக்கு பாத்திரர்
மகிமைக்கு பாத்திரர் நீதானய்யா (2)
நீதிமான்கள் துதிக்கும்போது
வெற்றிக் கொண்டாட்டம் பெருகுதுங்க (2)
நீதிமான்கள் பெருகும் போது
பட்டணமெல்லாம் களிகூறுதே (2)
உன்னதமான கர்த்தரையே உயர்த்தி பாடிடுவோம் – 2
மகிழ்ந்து பாடி கொண்டாடுவோம் – 2 ஜோரா…
நமது தேவன் பெரியவரும்
ஸ்தோத்தரிக்கத் தக்கவரும் (2)
தமது மகிமையின் பிரசனத்தால்
பர்வதம் மெழுகு போல் உருகிடுதே (2)
உன்னதமான கர்த்தரையே உயர்த்தி பாடிடுவோம் -2
மகிழ்ந்து பாடி கொண்டாடுவோம் -2 ஜோரா
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
நமது தேவன் எழுந்தருளி
சத்துருக்கள சிதறப் பண்ணி (2)
சீயோனுக்கு தயைசெய்து
சிறையிருப்பை திருப்பிடுவார் (2)
உன்னதமான கர்த்தரையே உயர்த்தி பாடிடுவோம் – 2
மகிழ்ந்து பாடி கொண்டாடுவோம் – 2 ஜோரா

No comments: