Tuesday, June 19, 2018

NEETHIMAN SELITHU VAALVAN LYRICS


நீதிமான் செழித்து வாழ்வான்
நீதிமான் பனையைப் போல
செழித்து வாழ்வான்
லீபனோனின் கேதுருவாய்
வளருவான் (2)
1. தீமையை வெறுத்திடுங்கள்
நன்மையே செய்திடுங்கள்
கர்த்தர் நம்மோடிருப்பார் – நம்மை
செழிப்படைய செய்வார் – நீதி
2. கலங்கிடாதிருங்கள்
கண்ணீர் விடாதிருங்கள்
கர்த்தரின் சாட்சிகளாய் – நம்மை
செழிப்படைய செய்வார் – நீதி
3. சிறுமைப்பட்ட நாட்கள்
துன்பத்தின் வருடங்கள்
சரியாய் மகிழ்ச்சியாக்குவார் – நம்மை
செழிப்படையச் செய்வார் – நீதி
4. ஆகாரத்தை தண்ணீரில் போடு
அநேக நாள் பிறகு அதின் பலனை
களிகூர்ந்து காணச் செய்வார் – நம்மை
செழிப்படையச் செய்வார் – நீதி

No comments: