Tuesday, June 19, 2018

INNALIL YESU NATHAR LYRICS


1. இந்நாளில் ஏசுநாதர் உயிர்த்தார் கம்பீரமாய்
இகல் அலகை சாவும் வென்றதிக வீரமாய்
மகிழ் கொண்டாடுவோம்
மகிழ் கொண்டாடுவோம்
2. போர்ச்சேவகர் சமாதி சூழ்ந்து காவலிருக்க
புகழார்ந் தெழுந்தனர் தூதன் வந்து கல்மூடிப் பிரிக்க – மகிழ்
3. அதிகாலையில் சீமோனோடு யோவானும் ஓடிட
அக்கல்லறையினின் றேகினர் இவர் ஆய்ந்து தேடிட – மகிழ்
4. பரிசுத்தனை அழிவுகாண வொட்டீர் என்று முன்
பகர் வேதச் சொற்படி பேதமற் றெழுந்தார் திருச்சுதன் – மகிழ்
5. இவ்வண்ணமாய் பரன் செயலை எண்ணி நாடுவோம்
எல்லோருமே களி கூர்ந்தினி துடன் சேர்ந்து பாடுவோம் – மகிழ்

No comments: