Wednesday, December 23, 2015

Nan nirpatum nirmulamakatatum Deva

நான் நிற்பதும் நிர்முலமாகாததும் தேவ கிருபையே
நான் உயிருடன் வாழ்வதும் சுகமுடன் இருப்பதும்
கிருபையே தேவகிருபையே தேவகிருபையே தேவகிருபையே - 2

காலையில் எழுவதும் கர்த்தரை துதிப்பதும்
மாலையில் காப்புடன் இல்லம் வருவதும் கிருபையே
போக்கிலும் வரத்திலும் தொலைதூர பயணத்திலும் - 2
பாதம் கல்லிலே இடறாமல் காப்பதும் கிருபையே - உன் - 2

அக்கினி நடுவினிலே என்னை எரித்திட நேர்ந்தாலும்
தூதனாக நின்று என்னை காப்பதும் கிருபையே
ஆழியின் நடுவிலும் சீறிடும் புயலினிலும் - 2
நீர்மேல் நடந்து வந்து என்னைக் காப்பதும் கிருபையே - 2

கண்ணீர் கவலைகளில் கஷ்ட நஷ்டங்களில்
துஷ்டனின் கைக்கு விலக்கி காப்பதும் கிருபையே
ஆற்றித் தேற்றியே அரவணைத்திடும் - 2
மாபெரும் கிருபையே எங்கள் தேவ கிருபையே - 2

No comments: