Wednesday, December 23, 2015

Naan Paada Varuveer Aiya

நான் பாட வருவீர் ஐயா
நான் போற்ற மகிழ்வீர் ஐயா (2)
என் வாழ்விலே வந்தீர் ஐயா
புது வாழ்வு தந்தீர் ஐயா (2)

1. தாய் தன் பாலனை மறந்தாலும்
நான் உன்னை மறவேன் என்றவரே (2)
உள்ளங்கையில் என்னை வரைந்தீரே
எந்தன் மதில்கள் உமக்கு முன்னே (2)

2. இமைப் பொழுதும் என்னை மறந்தாலும்
இரக்கத்தாலே என்னை சேர்த்து கொள்வீர் (2)
உந்தன் அன்பை நான் மறப்பேனோ
ஜீவ நாளெல்லாம் பாடிடுவேன் (2)

3. மலைகள் பர்வதங்கள் விலகினாலும்
உம் கிருபை என்னை விட்டு விலகாது (2)
நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்
உந்தன் வாக்குகள் மாறாதது (2)

No comments: