Sunday, December 20, 2015

Kanden kalvariyin katchi

கண்டேன் கல்வாரியின் காட்சி
கண்ணில் உதிரம் சிந்துதே
அன்பான அண்ணல் நம் இயேசு
நமக்காய் பட்ட பாடுகள்

கல்வாரி மலை மீதிலே
கள்ளர்கள் மத்தியிலே
சிலுவையில் அறைந்தனரே
உனக்காய் ஜீவன் விட்டாரே

பாழும் உலகத்தின்
பாவப்பிணி போக்க
சிலுவை சுமந்து போகும்
காட்சி கண்முன் போகும்

பாவ உலகத்தில்
ஜீவிக்கும் மானிடனே
பாரும் அவர் உனக்காய்
குருசில் தொங்கும் காட்சியை

No comments: