அன்பின் முகத்தை அன்று நான் கண்டேன்
கல்வாரி மலை மேல் - தேவ அன்பின்
எல்லை அன்று நான் கண்டேன்
கொல்கொதா மலை மேல்
தியாகத்தின் நல் ஓசையைக் கேட்டேன்
கருனையின் முகங்கண்டேன்
கல்வாரி மலைமேல் அன்று
தேவ திருசுதன் அன்று அம்மலை மேல்
பாடுகள் ஏற்றதினால்
மனுக்குல பாவம் தீர்த்திடவே அவர்
சிதைந்து மாண்டதினால் ஓ....ஓ..
இரட்சகர் இயேசு அன்று அம்மலை மேல்
இரத்தம் சிந்தினதால்
திருக்கால் கரங்கள் மூன்றாணிகளால்
துளைக்கத் தொங்கினதால் ஓ...ஓ....
No comments:
Post a Comment