Saturday, October 17, 2015

athikaalaiyil sooriyanai paarkaiyile

1. அதிகாலையில் சூரியனைப் பார்க்கையிலே
என் தேவன் உறங்காதவர்
என்று நான் அறிவேன்
நான் குருவிகள் குரலைக் கேட்கையில்
என் தேவனும் கேட்கிறார்
என் பயம் அறிவார்
கண்ணீர் காண்பார்
அழுகையைத் துடைத்திடுவார்

எனக்கொரு தேவன் உண்டு
அவர் என்னைக் காண்கின்றார்
அவர் என்றென்றும் என்னைக் காண்கின்றார்
எல் ரோயீ என்னைக் காணும் தேவனே

2. மேகம் கடப்பதைக் காண்கையில்
நான் மனதில் ஜெபிக்கின்றேன்
இந்த உலகத்தின் மாயைகள்
என்னை மேற்கொள்ள கூடாது
நதிகள் புரள்வதைக் காண்கையில்
நான் எதற்கும் அஞ்சிடேன்
அவர் அன்பு என்றும் மாறாது
என்றும் நமக்குண்டு

No comments: