Thursday, December 17, 2015

VAAN PURAVE ENGAL LYRICS

வான் புறாவே எங்கள் மீது வந்தமர்ந்திடும்
வன் செட்டைகள் விரித்தே
எம் அச்சமெல்லாம் அகல
வன் செயலாய் வந்திறங்கிடும் எம்மில்

ஆவியின் அக்கினியால் தரிசித்திட
அனலுள்ள இருதயம் அளித்திடவே
அன்பினால் அனைத்தோடும் கனலடைய
அனுதினம் அருள்மாரி சொரிந்திடுமே

ஊற்றிடுமே உமதாவியை
மாற்றிடுமே உம்மைப் போலவே

சோர்ந்திடும் உள்ளங்கள் உணர்வடைய
மாய்ந்திடும் சரீரங்கள் உயிரடைய
ஆண்டிடும் சக்திகள் அகன்றோடவே
அண்டி வரும் எமக்கு நின் ஜெயம்தாருமே

பற்பல பாஷைகள் மகிழ்ந்துரைக்க
அற்புத திருவன்பை புகழ்ந்துரைக்க
நற்செய்கையாம் நவ சிருஷ்டியதில்
பொற்பரனே வளர்ந்திட பொழிந்திடுவீர்

நேசரே நினைத்திடா வேளை வருவீர்
சேர்த்திட தூயவரை உமதுடனே
வேளையும் காலமும் சாயுமுன்னே
வேளையிது தீர கனிந்திறங்கிடுமே

No comments: