Wednesday, September 9, 2015

RATHAM KAAYAM KUTHUM NIRAINTHU

1. இரத்தம் காயம் குத்தும் நிறைந்து, நிந்தைக்கே
முள் கிரீடத்தாலே சுற்றும் சூடுண்ட சிரசே,
முன் கன மேன்மை கொண்ட நீ லச்சை காண்பானேன்?
ஐயோ, வதைந்து நொந்த உன்முன் பணிகிறேன்.

2. நீர் பட்ட வாதை யாவும் என் பாவப் பாரமே;
இத்தீங்கும் நோவும் சாவும் என் குற்றம் கர்த்தரே,
இதோ, நான் என்றுஞ் சாக நேரஸ்தன் என்கிறேன்;
ஆனாலும் நீர் அன்பாக என்னைக் கண்ணோக்குமேன்.

3. நான் உம்மைத் தாழ்மையாக வணங்கி நித்தமே
நீர் பட்ட கஸ்திக்காக துதிப்பேன், இயேசுவே;
நான் உம்மில் ஊன்றி நிற்க சகாயராயிரும்;
நான் உம்மிலே மரிக்க கடாட்சித்தருளும்.

4. என் மூச்சொடுங்கும் அந்த கடை இக்கட்டிலும்
நீர் எனக்காய் இறந்த ரூபாகக் காண்பியும்;
அப்போ நான் உம்மைப் பார்த்து கண்ணோக்கி நெஞ்சிலே
அணைத்துக்கொண்டு சாய்ந்து, தூங்குவேன், இயேசுவே.

No comments: