Wednesday, September 9, 2015

IVARE PERUMAAN MATRA PER ALAVE

இவரே பெருமான் , மற்றப்
பேர் அலவே பூமான் - இவரே பெருமான்

சரணங்கள்

1. கவலைக் கிடங்கொடுத் தறியார் - வேறு
பவவினை யாதுமே தெரியார் - இப்
புவனமீது நமக்குரியார் --- இவரே

2. குருடர்களுக் குதவும் விழியாம் - பவக்
கரும இருளை நீக்கும் ஒளியாம் - தெய்வம்
இருக்குந் தலஞ்சல் வாசல் வழியாம் --- இவரே

3. பலபிணி தீர்க்கும் பரிகாரி - சொல்லும்
வலமையில் மிக்க விபகாரி - எக்
குலத்துக்கும் நல்ல உபகாரி --- இவரே

4. அறஞ் செய்வதினில் ஒரு சித்தன் - கொடு
மறம்விடு பவர்க்கருள் முத்தன் - இங்கே
இறந்தோர்க் குயிரீயும் கர்த்தன் --- இவரே

5. அலகை தனை ஜெயித்த வீரன் - பவ
உலகை ரட்சித்த எழிற்பேரன் - விண்
ணுலகு வாழ் தேவ குமாரன் --- இவரே

6. பொன்னுலகத் தனில்வாழ் யோகன் - அருள்
துன்ன உலகில் நன்மைத் தேகன் - நம்பால்
தன்னை யளித்த ஓர் தியாகன் --- இவரே

No comments: