Tuesday, September 1, 2015

KAALAIYIL DEVANAI THEDU JEEVA

காலையில் தேவனைத் தேடு - ஜீவ
காருண்யர் பாதம் பணிந்து மன்றாடு

அனுபல்லவி

சீலமுடன் பதம் பாடிக் கொண்டாடு ,
சீரான நித்திய ஜீவனை நாடு --- காலையில்

சரணங்கள்

மன்னுயிர்க்காய் மரித்தாரே - மனு
மைந்தனென நாமம் வைத்திருந்தாரே
உன் சிருட்டிகரை நீ உதயத்திலெண்ணு
உள்ளங்கனிந்து தனிஜெபம் பண்ணு --- காலையில்

பாவச் சோதனைகளை வெல்லு - கெட்ட
பாருடல் பேயுடன் போருக்கு நில்லு
ஜீவ கிரீடஞ் சிரத்திலணியச்
சிந்தனை செய் மனுவேலனைப் பணிய --- காலையில்

சிறுவர்கள் என்னிடஞ் சேரத் -தடை
செய்யா திருங்களென்றார் மனதார
பரலோக செல்வ மவர்க்குப் பலிக்கும்
பாக்கியமெல்லாம் பரந்து ஜொலிக்கும் --- காலையில்

வேலையுனக்குக் கைகூட - சத்ய
வேதன் கிருபை வரத்தை மன்றாட
காலை தேடுவோர் எனைக் கண்டடைவாரே
கண்விழித்து ஜெபஞ் செய்யுமென்றாரே --- காலையில்

No comments: