Tuesday, September 1, 2015

ANBARIN NESAM PERIYATHE ATHAI

அன்பரின் நேசம் பெரிதே
அதை நினைந்தே மகிழ்வோம்

1. உலகத் தோற்றம் முன்னமே
உன்னத அன்பால் தெரிந்தோரே
இந்த அன்பு ஆச்சரியமே
இன்பம் இகத்தில் வேறு இல்லை

2. அன்பின் அகலம் நீளமும்
ஆழம் உயரம் அறிவேனோ
கைவிடாமல் காக்கும் அன்பு
தூக்கி எடுத்து தேற்றும் அன்பு

3. பாவ சேற்றில் எடுத்தென்னை
பாவமெல்லாம் தொலைத்தாரே
தூய இரத்தம் சிந்தி மீட்ட
தூய்மையான தேவ அன்பு

No comments: