Saturday, August 22, 2015

VAARUM VAARUM MAGATHUVA DEVANE

வாரும் வாரும் மகத்துவ தேவனே
வல்லமையாக இப்போ வந்திடும்

1. மகிமைச் சொருபனே! மாவல்ல தேவனே!
மன்னா! வந்தாசீர்வாதம் தாருமே --- வாரும்

2. தாய் தந்தை நீர் தாமே! தற்பரா! எங்கட்கு
தரணியில் வேறோர் துணை இல்லையே --- வாரும்

3. பாவத்தை வெறுத்து பாவியை நேசிக்கும்
பரிசுத்த ராஜனே! நீர் வாருமே --- வாரும்

4. பக்தரும் முக்தரும் பாடித் துதிக்கின்ற
பரலோக ராஜனே! நீர் வாருமே --- வாரும்

5. காருண்ய தேவனே! கதியும்மை யண்டினோம்
கடைசிவரையும் காத்து இரட்சியும் --- வாரும்

6. மன்னா! உம் வரவை எண்ணி யாம் ஜீவிக்க
ஏவுதல் தினம் தாரும் ஏகனே --- வாரும்

7. விழிப்புள்ள ஜீவியம் விமலா! நீர் ஈந்துமே
வெற்றியடையக் கிருபை தாருமே --- வாருமே

8. இவ்வித பாக்கியம் ஏழைகளெங்கட்கு
ஈந்ததாலுமக்கென்றும் ஸ்தோத்திரம் --- வாரும்

No comments: