பவனி செல்கின்றார் ராசா - நாம்
பாடிப் புகழ்வோம் நேசா!
பாடிப் புகழ்வோம் நேசா!
அனுபல்லவி
அவனிதனிலே மறிமேல் ஏறி
ஆனந்தம் பரமானந்தம். --- பவனி
ஆனந்தம் பரமானந்தம். --- பவனி
சரணங்கள்
1. எருசலேமின் பதியே! - சுரர்கரிசனையுள்ள நிதியே!
அருகில் நின்ற அனைவர் போற்றும்
அரசே, எங்கள் சிரசே! --- பவனி
2. பன்னிரண்டு சீடர் சென்று - நின்று
பாங்காய் வஸ்திரம் விரிக்க
நன்னயம் சேர் மனுவின் சேனை
நாதம் கீதம் ஓத. --- பவனி
3. குருத்தோலைகள் பிடிக்க, - பாலர்
கும்புகும்பாகவே நடிக்க
பெருத்த தொனியாய் ஓசன்னாவென்று
போற்ற மனம் தேற்ற.
No comments:
Post a Comment