Monday, August 24, 2015

PARANE THIRUKKADAIKKAN PARAYO LYRICS

பரனே திருக்கடைக்கண் பாராயோ? – என்றன்
பாவத்துயர் அனைத்தும் தீராயோ?

சரணங்கள்

1. திறம் இலாத எனை முனியாமல்யான்
செய்த குற்றம் ஒன்றும் நினையாமல் --- பரனே

2. மாய வலையில் பட்டுச் சிக்காமல்லோக
வாழ்வில் மயங்கி மனம் புக்காமல் --- பரனே

3. அடியேனுக் கருள் செய் இப்போதுஉன
தடிமைக் குன்னை அன்றிக் கதி ஏது? --- பரனே

4. வஞ்சகக் கவலை கெடுத் தோட்டாயோ? – என்றன்
மனது களிக்க வர மாட்டாயோ? --- பரனே

5. ஏசுவின் முகத்துக் காய் மாத்ரம்எனக்
கிரக்கம் செய்யும்; உமக்கே தோத்ரம்! --- பரனே

No comments: