நெஞ்சமே, தள்ளாடி நொந்து,
நீ கலங்காதே; - கிறிஸ்
தேசுவே உனக்கு நல்ல
நேச துணையே.
சரணங்கள்
1. தஞ்சமான தோழர்களும் வஞ்சகமாக - உன்னை
தாககியே பகைஞராக நின்ற போதிலும், --- நெஞ்சமே
2. அன்னை தந்தை ஆனவரும் பின்ன பேதமாய் - உனை
அங்கலாய்க்க விட்டெளிஞன் ஆன போதிலும் --- நெஞ்சமே
3. ஜீவனம் இழந்து துன்பம் மேவினாலும், - மா
சிறுமையாய்ச் சகிக்கொணா வறுமை கொண்டாலும். --- நெஞ்சமே
4. பஞ்சமும் பசியும் வந்து கெஞ்ச வைத்தாலும், - மிகு
பாரமாய்ச் சுமை உன்மேலே பற்றி நின்றாலும். --- நெஞ்சமே
5. கெட்ட நோயிலும் நீ அகப் பட்டுழன்றாலும், --- எந்தக்
கேடுகள் உன்மேலே வந்து மூடினாலும். --- நெஞ்சமெ
6. ஆன வீடு தானும் கொள்ளை ஆன போதிலும், - கிறிஸ்
தண்ணலே, உனக் கெல்லாம் என்றெண்ணி நிறைவாய் --- நெஞ்சமே
No comments:
Post a Comment