Saturday, April 11, 2020

THAAI MARANDHALUM AVAR UNNAI

தாய் மறந்தாலும் அவர் உன்னை
ஒருபோதும் மறப்பதில்லை
உள்ளங்கையில் உன்னை வரைந்தவர்
ஒருபோதும் விடுவதில்லை-2

ஆ.. அல்லேலூயா.. ஓ… ஓசன்னா
பெற்றோர் உன்னை மறந்தாலும்
உற்றார் உன்னை கைவிட்டாலும்-2
உள்ளங்கையில் உன்னை வரைந்தவர்
உன்னை ஒருபோதும் மறப்பதில்லை 

நம்பினோர் கைவிட்டாலும்
நண்பர்கள் விலகிட்டாலும்-2
நல்ல நண்பர் நம் இயேசுவே
உன்னை ஒருபோதும் கைவிடாரே
உண்மை நண்பர் நம் இயேசுவே
உன்னை ஒருபோதும் கைவிடாரே 

அன்பானவர் மறைந்தாரோ
ஆதரவை இழந்தாயோ-2
ஆறுதலின் தேவன் இயேசுவே
உன்னை ஆற்றி தேற்றி நடத்திடுவார்
உண்மை தேவன் நம் இயேசுவே
உன்னை ஆற்றி தேற்றி நடத்திடுவார் 

தாய் மறந்தாலும் அவர் உன்னை
ஒருபோதும் மறப்பதில்லை
உள்ளங்கையில் நம்மை வரைந்தவர்
ஒருபோதும் விடுவதில்லை
அவர் ஒருபோதும் மறப்பதில்லை
இயேசு ஒருபோதும் விடுவதில்லை

REHOBOTH EN VAAKKUTHTHATHTHAME

ரெகொபோத் என் வாக்குத்தத்தமே
இழந்ததெல்லாம் திரும்ப வருகுதே
முந்தின சீரைப்பார்க்கிலும்
நற்சீரை எனக்கு தந்தீரே-2

நீர் நல்லவர் நன்மை செய்பவர்
நீர் வல்லவர் வாக்கு மாறாதவர்-நீரே-2

1.நான் எதிர்பார்த்த கதவுகள் எல்லாம் மூடின போது
எதிர்பாரா ரெகொபோத்தை வாக்குப்பண்ணினீரே-2

நீர் நல்லவர் நன்மை செய்பவர்
நீர் வல்லவர் வாக்கு மாறாதவர்-நீரே-2

2.என் உயர்வைக்கண்டு துரத்தின மனிதர்கள் முன்பு
நான் பலுகி பெருகிட நீர் இடம் உண்டாக்கினீர்-2

நீர் நல்லவர் நன்மை செய்பவர்
நீர் வல்லவர் வாக்கு மாறாதவர்-நீரே-2

3.வெறுமையாய் தனிமையில் நின்ற தேசத்தில் என்னை
கிருபையால் அலங்கரித்து ஆசீர்வதித்தீரே-2

நீர் நல்லவர் நன்மை செய்பவர்
நீர் வல்லவர் வாக்கு மாறாதவர்-இயேசுவே-2-ரெகொபோத்

SENAIGALIN KARTHAR NAMMODU IRUKIRAAR

சேனைகளின் கர்த்தர் நம்மோடு இருக்கிறார்
யாக்கோபின் தேவன் உயர்ந்த அடைக்கலம்-2
அவர் சொல்ல எல்லாம் ஆகும்
அவர் கட்டளையிட நிற்கும்-2
தேவனால் எல்லாம் கூடும்-8
நம் தேவனால் எல்லாம் கூடும்

1.நான் கெம்பீரமாய் நடக்க
என் பாதையை அகலமாக்கினீர்
நான் விசாலத்தில் தங்கிட
என் எல்லையை பெரிதாக்கினீர்-2
என்மேல் கிருபையாய் நீர் தந்த ஈவு
அதிகாரமாய் பெருகிற்று-2
தேவனால் எல்லாம் கூடும்-8
நம் தேவனால் எல்லாம் கூடும்

2.என் விருப்பங்கள் நிறைவேற்றிட
நான் செய்வதை வாய்க்க செய்தீர்
என் கனவுகள் நிறைவேறிட
நீர் வாசலை திறந்து வைத்தீர்-2
எனக்கு முத்திரை மோதிரம் தந்து
உங்க வார்த்தையை நிறைவேற்றினீர்-2
தேவனால் எல்லாம் கூடும்-8
நம் தேவனால் எல்லாம் கூடும்

3.நான் வாழ்ந்து செழித்திருக்க
நீர் பொக்கிஷத்தை திறந்து வைத்தீர்
நான் சிங்காசனத்தில் அமர
நீர் எனக்காய் யுத்தம் செய்வீர்-2
எனக்கு எதிரான கையெழுத்தை
முற்றிலும் குலைத்திட்டீர்-2
தேவனால் எல்லாம் கூடும்-8
நம் தேவனால் எல்லாம் கூடும்

YESU ENAKKU JEEVAN THANDHAARE

இயேசு எனக்கு ஜீவன் தந்தாரே

துதி பாடல் நான் பாடி
இயேசுவையே போற்றி
என்றென்றும் வாழ்ந்திடுவேன்
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா -4

சமாதானம் தந்தார் இயேசு -4
புது வாழ்வு தந்தார் இயேசு -4
விடுதலை தந்தார் இயேசு -4
வல்லமை தந்தார் இயேசு -4
அபிஷேகம் தந்தார் இயேசு -4

YESUVIN NAAMAM ELLAVATTERKUM

இயேசுவின் நாமம் எல்லாவாற்றிற்கும்
மேலான நாமம் இயேசுவின் நாமம்

எல்லாவற்றிற்கும் மேலான நாமம்
இயேசுவின் நாமம் இயேசுவின் நாமம்

துரைத்தனத்திற்கும் அதிகாரத்திற்கும்
பேய் பிசாசின் தந்திரத்திற்கும்

வல்லமைக்கும் கர்த்தத்துவத்துக்கும்
இம்மையிலும் மறுமையிலும்

ஸ்தோத்திரிப்பீர் ஸ்தோத்திரிப்பீர்
விசுவாசிப்போர் ஸ்தோத்திரிப்பீர்

ARULE PORULE AARANAME

அருளே! பொருளே! ஆரணமே அல்லும்பகலுந்துணைநீயே
இருள் சேர்ந்திடுமிவ்வேளையிலே இன்னலொன்றுந்தொடராமல்
மருண்டு மனது பிறழாமல், வஞ்சத் தொழிலிற் செல்லாமல்
கருணாகரனே! எனைக்காக்கக் கழறுந் துதியுனக் கொரு கோடி

சென்றநாட்களனைத்திலும் சிறியேன் தனக்கு செய்துவந்த
நன்றாம் நன்மைகளனைத்திற்கும் நவிலற்கரிய தயைகளுக்கும்,
என்றுமழியா வரங்களுக்கும் ஏழையடியேன் மிகத் தாழ்ந்து
கன்று நினைந்து கதறுதல்போல் கழறுந் துதியுனக் கொரு கோடி

பற்றொன்றில்லாப் பரம்பொருளே! பரமானந்த சற்குருவே!
வற்றாஞான சமுத்திரமே வடுவொன்றில்லா வான் பொருளே!
பெற்றோர், உற்றோருலகனைத்தும் பிரியமுடனே சுகித்திருக்கக்
கற்றில்லாத மிகச்சிறியேன் கழறுந் துதியுனக் கொரு கோடி,

பத்தியதனாலுனைப் பாடிப் பணிந்தே யென்றும் வாழ்ந்திருக்க,
நத்தும், இரவு முழுதனைத்தும் நாதா, என்னைக்காத்தருளி
முத்தியென்னும் மோட்சநிலை முடிவிலடியேன் தன்னைச் சேர்க்கக்
கத்தியலறிப் பரவசமாய்க் கழறுந்துதியுனக் கொரு கோடி

ASIRVATHIKKUM DEVAN THAM ASIR

ஆசீர்வதிக்கும் தேவன்
தம் ஆசீர் பொழிந்திடும் நேரம்
பெருக்கத்தை அளித்திடும் தேவன்
நம்மை பெருக செய்வார் இவ்வருடம்


பெலத்தின்மேல் பெலனே
கிருபையின்மேல் கிருபை
மகிமையின்மேல் மகிமை
பரிசுத்தம் பரிசுத்தமே – என் வாழ்வில்


1. சோர்வான சூழ்நிலை வந்திடினும்
எதிர்ப்பு ஏமாற்றம் சூழ்ந்திடினும்
நெருக்கத்திலும் பெருக்கத்தையே
அளித்திடும் தேவன் நம்மோடுண்டு


2. வறண்ட வாழ்க்கை செழித்திடுதே
கிருபையின் ஊற்றுகள் பெருகிடுதே
நூறு மடங்கு பலன் தந்திடும்
பெருக்கத்தின் தேவன் நம்மோடுண்டு


3. ஆத்தும பாரம் பெருகிடுதே
ஊழியம் தீவிரம் அடைந்திடுதே
திரள் கூட்டம் சீயோனையே
நோக்கி வந்திடும் காலமிது