Sunday, February 10, 2019

NANDRI PALI NANDRI PALI LYRICS


நன்றிபலி நன்றிபலி நல்லவரே உமக்குத்தான்
ஆனந்தம் ஆனந்தமே அப்பா உம் திருப்பாதமே

1. நேற்றைய துயரமெல்லாம் இன்று மறைந்ததையா
நிம்மதி பிறந்தையா நிரந்தரமானதையா
கோடி கோடி நன்றி டாடி (3)

2. இரவெல்லாம் காத்தீர் இன்னும் ஓர்நாள் தந்தீர்
மறவாத என் நேசரே உறவாடி மகிழ்ந்திடுவேன்

3. ஊழியப் பாதையிலே உற்சாகம் தந்தீரையா
ஓடிஓடி உழைப்பதற்கு உடல்சுகம் தந்தீரையா

4. வேதனை துன்பமெல்லாம்
ஒரு நாளும் பிரிக்காதையா
நாதனே உம் நிழலில்
நாள்தோறும் வாழ்வேனையா – இயேசு

5. ஜெபத்தைக் கேட்டீரையா
ஜெயத்தைத் தந்தீரையா
பாவம் அணுகாமலே பாதுகாத்து வந்தீரையா

6. புதிய நாள் தந்தீரையா
புது கிருபை தந்தீரையா
அதிசயமானவரே ஆறுதல் நாயகனே

7. என்நாவில் உள்ளதெல்லாம்
உந்தன் புகழ்தானே
நான் பேசி மகிழ்வதெல்லாம்
உந்தன் பெருமைதானே

INDIAN ENDRU SOLVOM LYRICS


இந்தியன் என்று சொல்வோம்
அந்த சொல்லில் பெருமிதம் கொள்வோம்
தீங்கற்ற தேசம் படைக்க
நம் கைகளை இணைத்துக் கொள்வோம் 
இது எங்கள் பாரதம்
இது எங்கள் பாரதம்
இது எங்கள் பாரதம்
இது எங்கள் பாரதம்
இந்தியன் என்று சொல்வோம்
அந்த சொல்லில் பெருமிதம் கொள்வோம்
தீங்கற்ற தேசம் படைக்க
நம் கைகளை இணைத்துக் கொள்வோம் 
இந்தியன் என்று சொல்வோம்
அந்த சொல்லில் பெருமிதம் கொள்வோம்
தீங்கற்ற தேசம் படைக்க
நம் கைகளை இணைத்துக் கொள்வோம் 
நம் மொழிகள் வேறாயினும்
நாம் ஒரு தாய் மக்களே
நம் நிறங்கள் வேறாயினும்
நம்மில் வேற்றுமை இல்லையே
நம் மொழிகள் வேறாயினும்
நாம் ஒரு தாய் மக்களே
நம் நிறங்கள் வேறாயினும்
நம்மில் வேற்றுமை இல்லையே
எங்கள் பாரதம்
இது எங்கள் பாரதம்
எங்கள் பாரதம்
இது எங்கள் பாரதம்
எங்கள் பாரதம்
இது எங்கள் பாரதம்
இது எங்கள் பாரதம்
இது எங்கள் பாரதம்
இது எங்கள் பாரதம்
இது எங்கள் பாரதம்
யுத்தங்கள் மாறனும்
சமாதானம் பிறக்கனும்
ஜாதி வேற்றுமை இல்லாமல்
நாம் ஒன்றாய் வாழனும்
யுத்தங்கள் மாறனும்
சமாதானம் பிறக்கனும்
ஜாதி வேற்றுமை இல்லாமல்
நாம் ஒன்றாய் வாழனும்
இளைஞர் சமுதாயம் இன்றே
எழுந்து நீதியை நாட்டனும்
இளைஞர் சமுதாயம் இன்றே
எழுந்து நீதியை நாட்டனும்
நம் தேசத்தை உயர்த்தனும்
எங்கள் பாரதம்
இது எங்கள் பாரதம்
எங்கள் பாரதம்
இது எங்கள் பாரதம்
எங்கள் பாரதம்
இது எங்கள் பாரதம்
இது எங்கள் பாரதம்
இது எங்கள் பாரதம்
இது எங்கள் பாரதம்
இது எங்கள் பாரதம்
சோம்பலை போக்குவோம்
நம் வளத்தை பெருக்குவோம்
நீதி நேர்மையை கடைப்பிடித்து
ஒழுக்கத்தை நாட்டுவோம்
சோம்பலை போக்குவோம்
நம் வளத்தை பெருக்குவோம்
நீதி நேர்மையை கடைப்பிடித்து
ஒழுக்கத்தை நாட்டுவோம்
அறிவியல் அறிஞர்கள்
மாபெரும் ஞானிகள்
கொண்ட நம் நாடிது
வளமிக்க பொன் நாடிது
இறைவன் கொடுத்த தேசத்தை
வளமாய் காத்திடுவோம்
கயவர்கள் கையில்
தேசம் போக துளியும் விட மாட்டோம்
எங்கள் பாரதம்
இது எங்கள் பாரதம்
எங்கள் பாரதம்
இது எங்கள் பாரதம்
எங்கள் பாரதம்
இது எங்கள் பாரதம்
இது எங்கள் பாரதம்
இது எங்கள் பாரதம்
இது எங்கள் பாரதம்
இது எங்கள் பாரதம்

ENAKKAGA YAVAIYUM SEITHU LYRICS


எனக்காகவே யாவையும்
செய்து முடித்தீர்
நன்றி நன்றி ஐயா
என் பாவங்கள் யாவையும் 
சுமந்து கொண்டீரே
நன்றி நன்றி ஐயா
நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும்
அதிகமாக தருபவரே (2)
நான் எனது பிள்ளைக்கு
நல்ல ஈவைக் கொடுக்கின்றேன்
பரம பிதா அதைப்பார்க்கிலும்
கொடுத்திடுவாரே (2)
நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும்
அதிகமாக தருபவரே (2)
அன்றாடம் வேண்டிய
ஆகாரம் தாருமே
தீமை என்னை அணுகாமல் காக்கும் தேவனே (2)
நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும்
அதிகமாக தருபவரே (2)
ஆபிரகாமை அழைத்தீரே
ஆசீர்வாதம் கொடுத்தீரே
அது போல என்னையும் ஆசிர்வதியும் (2)
நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும்
அதிகமாக தருபவரே (2)

EN YESU UNNAI THEDUGIRAR LYRICS


என் இயேசு உன்னைத் தேடுகிறார்
இடமுண்டோ மகனே உன் உள்ளத்தில்
1. கதறிடும் உன்னைப் பார்க்கின்றார்-உன்
கண்ணீரைத் துடைக்க வருகின்றார்
உதவிடும் கரத்தை நீட்டுகிறார்-உன்
உள்ளத்தில் வாழத் துடிக்கின்றார்

2. சிலுவை மரணம் உனக்காக
சிந்திய திரு இரத்தம் உனக்காக
உன் பாவம் சுமந்து தீர்த்தாரே – தன்
உயிர் தந்து உன்னை மீட்டாரே

3. மார்த்தாள் வீட்டில் இடம் கொடுத்தாள்
மரித்த லாசரை மீண்டும் கண்டாள்
கலங்கிடும் மனிதா வருவாயா – என்
கர்த்தரின் பாதம் விழுவாயா

4. சகேயு உடனே இறங்கி வந்தான்
சந்தோஷமாக வரவேற்றான்
பாவங்கள் அனைத்தும் அறிக்கை செய்தான்
பரலோக இன்பம் பெற்றுக் கொண்டான்

5. பேதுரு படகில் இடம் கொடுத்தான்
பெரும் தோல்வி மாறி மகிழ்வடைந்தான்
அதிசய தேவனை கண்டு கொண்டான்-என்
ஆண்டவன் பின்னே நடந்து சென்றான்

BERAKAVIL KOODUVOM KARTHAR LYRICS


பெராக்காவில் கூடுவோம்
கர்த்தர் நல்லவர் – என்று
பாடுவோம் பாடுவோம்

1. எதிரியை முறியடித்தார் பாடுவோம்
இதுவரை உதவி செய்கிறார் பாடுவோம்

2. நமக்காய் யுத்தம் செய்தார் பாடுவோம்
நாளெல்லாம் பாதுகாத்தார் பாடுவோம்

3. இளைப்பாறுதல் தந்தார் பாடுவோம்
இதயம் மகிழச் செய்தார் பாடுவோம்

4. சமாதானம் தந்தாரே பாடுவோம்
சந்தோஷம் தந்தாரே பாடுவோம்

5. யெகோவா மெக்காதீஸ் ஸ்தோத்திரம்
பரிசுத்தம் தருகிறீர் ஸ்தோத்திரம்

6. யெகோவா ஸிட்கேனு ஸ்தோத்;திரம்
எங்கள் நீதியே ஸ்தோத்திரம்

7. யெகோவா ஓசேனு ஸ்தோத்திரம்
உருவாக்கும் தெய்வமே ஸ்தோத்திரம்

ANDAVAR ALLUGAI SEIKIRAR LYRICS


ஆண்டவர் ஆளுகை செய்கின்றார்
அனைத்து உயிர்களே பாடுங்கள்
ராஜாதி ராஜா கர்த்தாதி கர்த்தர்
எப்போதும் இருப்பவர் இனிமேலும் வருபவர்

1. மகிழ்வுடனே கர்த்தருக்கு ஆராதனை
செய்யுங்கள்
ஆனந்த சத்தத்தோடே திருமுன்
வாருங்கள்

2. எக்காள தொனி முழங்க இப்போது
துதியுங்கள்
வீணையுடன் யாழ் இசைத்து வேந்தனை
துதியுங்கள்

3. துதியோடும் புகழ்ச்சியோடும் வாசலில்
நுழையுங்கள்
அவர்நாமம் உயர்த்திடுங்கள் ஸ்தோத்திர
பலியிடுங்கள்

4. ஓசையுள்ள கைத்தாளத்தோடு நேசரை
துதியுங்கள்
சுவாசமுள்ள யாவருமே, இயேசுவை
துதியுங்கள்

EN NESARAE EN DEIVAMA LYRICS



என் நேசரே என் தெய்வமே
உம்மை பாடி போற்றி புகழுவேன்

எல்லா புகழும் துதி மகிமையும்
எந்தன் இராஜன் ஒருவருக்கே
எந்தன் வாழ்வின் மேன்மையுமே
என்றும் உந்தன் பாதத்திலே

இயேசுவே இயேசுவே
இயேசுவே இயேசுவே

தாயின் கருவில் தெரிந்து கொண்டீர்
உமக்காக ஊழியம் செய்திட
உம் சித்தம் செய்திட
உமக்காக வாழ்ந்திட என்னையும்
பிள்ளையாய் மாற்றினீர்

பாவங்கள் கழுவினீர் தூய்மையாக்கினீர்
உம் ஜீவன் சிலுவையில் தந்தீர்
உம் நாமம் பாடிட ஓய்வின்றி துதித்திட
உமக்காக என்னைப்பிரித்து கொண்டீர்