Monday, April 21, 2025

Paavi Enmelae Kirubaiyai பாவி என் மேலே கிருபையாய்

 பாவி என் மேலே கிருபையாய் இருந்தருளும்

பாவத்தை பாராத சுத்தக் கண்ணனே

தாழ்மையுள்ள யாவருக்கும்
கிருபையை அள்ளித் தருபவரே
மார்பில் அறைந்து ஓடிவந்தேன்
மன்னித்து என்னை ஏற்றருளும்

வெறுமை எல்லாம் மாற்றிடுமே
வறுமை எல்லாம் நீக்கிடுமே
முத்திரை மோதிரம் தந்திடுமே
முத்தங்களால் என்னை அணைத்திடுமே

ஒருவரும் சேரா ஒளியினிலே
வாசம் செய்திடும் உன்னதரே
என்னை உம்மில் இணைத்தீரே
அதுதான் உமது கிருபையே

No comments: