Sunday, April 6, 2025

ENTHAN ULLAM PUTHU KAVIYALE PONGA எந்தன் உள்ளம் புதுக்கவியாலே பொங்க

 

1. எந்தன் உள்ளம் புதுக்கவியாலே பொங்க
இயேசுவைப் பாடிடுவேன்
அவர் நாமம் ஊற்றுண்ட பரிமள தைலம்
அவரையே நேசிக்கிறேன்.(2)
அல்லேலூயா துதி அல்லேலூயா - எந்தன்
அண்ணலாம் இயேசுவைப் பாடிடுவேன்
இத்தனை கிருபைகள் நித்தமும் அருளிய
கர்த்தனைக் கொண்டாடுவேன்.
2. சென்ற காலம் முழுவதும் காத்தாரே ஓர்
சேதமும் அணுகாமல்
சொந்தமாக ஆசீர் பொழிந்தெனக்கின்றும்
சுக பெலன் அளித்தாரே - அல்லேலுயா
3. சிலவேளை இமைப் பொழுதே தம்முகத்தை
சிருஷ்டிகர் மறைத்தாரே
கடும் கோபம் நீக்கித் திரும்பவும் என்மேல்
கிருபையும் பொழிந்தாரே - அல்லேலூயா
4. பஞ்சக்காலம் பெருகிட நேர்ந்தாலும் - தாம்
தஞ்சமே ஆனாரே
அங்கும் இங்கும் நோய்கள் பரவி வந்தாலும்
அடைக்கலம் அளித்தாரே - அல்லேலூயா

No comments: