Tuesday, April 29, 2025

Nannaaal Ithilae Asi koora நன்னாள் இதிலே ஆசி கூற

 நன்னாள் இதிலே ஆசி கூற வாரும் தேவனே

வருடங்கள் காலங்கள் கழிந்தாலும்
வழுவாமல் காத்த பரிசுத்தரே

கைகளின் பலனைச் சாப்பிடுவாய்
பாக்யமும் நன்மையும் உண்டாயிருக்கும் – உன்
உன் பிள்ளைகள் உன்னைச் சுற்றிலும் இருந்து
ஒலிவமரக் கன்றுகளைப் போலிருப்பார்கள்

நித்திய ஜீவனை அளியும் தேவா
நித்தமும் உம்மை ஆராதிக்க
உம் செட்டைகள் மறைவில் குஞ்சுகள் போல
எந்நாளும் பாதுகாத்திடுவீரே

Friday, April 25, 2025

Nanri Nanri Nanri நன்றி நன்றி நன்றி என்று துதிக்கிறேன்

 நன்றி நன்றி நன்றி என்று துதிக்கிறேன்

நல்லவரே உம் நன்மைகளை நினைக்கிறேன்
நன்றி ஐயா நன்றி ஐயா – இயேசையா

தகுதியில்லா அடிமை என்னை அணைக்கிறீர்
தாங்கி தாங்கி வழி நடத்தி மகிழ்கின்றீர்
அதிசயங்கள் ஆயிரம்
அன்பரே உம் கரங்களிலே

பெலவீனம் நீக்கி தினம் காக்கின்றீர்
பெரும் பெரும் காரியங்கள் செய்கின்றீர்
தீமையான அனைத்தையும்
நன்மையாக மாற்றுகிறீர்

உணவு உடை தினம் தந்து மகிழ்கின்றீர்
உண்மையான நண்பர்களை தருகின்றீர்
நன்மையான ஈவுகள்
நாள்தோறும் தருபவரே

கதறி அழுத நேரமெல்லாம் தூக்கினீர்
கருவியாக பயன்படுத்தி வருகின்றீர்
கண்மணிபோல் காப்பவரே
கைவிடாமல் மேய்ப்பவரே

Nanri Sollvom Yesuvukku நன்றி சொல்வோம் இயேசுவுக்கு

 நன்றி சொல்வோம் இயேசுவுக்கு

தமிழ் பண்ணிசைப்போம் இயேசுவுக்கு
நம்மை அவர் கண்ணோக்கினார் உயிரைத் தந்து மீட்டார்
எந்நாளுமே நம்மை அவர் அரணாய் நின்று காப்பார்

இயேசு என்னும் நாமமதைச் சொல்லச் சொல்ல
உள்ளம் புத்துணர்ச்சியாலே துள்ளத் துள்ள
உலகம் தரும் இடர்கள் எல்லாம்
ஒருநொடிப் பொழுதில் மாறிவிட
ஆடிப்பாடி நாளும் ஆண்டவரைப் போற்றுவோமே
அக்களிப்போம் நாளும் இன்னிசைகள் மீட்டுவோமே
என்றும் இனி நாம் பாடுவோம் அல்லேலு அலேலூயா
தொல்லையில் தோல்வியில்லை அல்லேலு அலேலூயா

பாரவோனின் தண்டனைக்குத் தப்பிவித்தார்
நம்மை பரிசுத்த பூமியெங்கும் வாழவைத்தார்
மன்னா என்னும் உணவைத் தந்து
பசியையும் தாகத்தையும் போக்கிவைத்தார்
கர்த்தரவர் இன்றும் நம்மிடையே வாழுகின்றார்
அன்பு வழி வாழ நாளும் நம்மைத் தூண்டுகின்றார்
என்றும் இனி நாம் பாடுவோம் அல்லேலு அலேலூயா
தொல்லையில்லை தோல்வியில்லை அல்லேலு அலேலூயா

Nee Pogum Paathai நீ போகும் பாதை எல்லாம்

 நீ போகும் பாதை எல்லாம் – உன் நேசர் கூட வருவார்

நீ காணும் தேசமெல்லாம் – உன் இயேசு தந்திடுவார்

தந்தன தந்தன ராகம் சொல்லி பாடுங்க – நீங்க
தகிட்டதகிட நாளம் தட்டி பாடுங்க – நீ போகும்

கண்ணீரை வடித்தது போதும் போதும் பட்ட
கஷ்டங்கள் எல்லாமே தீரும் தீரும்
நீ பட்ட துன்பங்கள் யாவும் யாவும் – ஒரு
நிமிஷத்தில் காணாமல் ஓடும் ஓடும்
உன்னோட கண்ணீரை மாற்றுவார்
நாள் தோறும் உன்னை அவர் தேற்றுவார்

கடன்பட்ட நெஞ்சமே கலங்காதிரு
உன்னுடன் இயேசு இருக்கின்றார் புலம்பாதிரு
உயிருள்ள தெய்வம் உன் இயேசுவே – ஒரு
வார்த்தை அவர் சொன்னால் போதுமே
ஒரு வார்த்தை சொன்னால் கடன் தீருமே

வானத்தின் மழை நீரும் பெய்யும் பெய்யும்
வறண்ட உன் வாழ்வெல்லாம் செழிப்பாய் – மாறும்
உள்ளங்கை மேகத்தைக் காட்டுவார்
வெள்ளம் போல் மழையையும் ஊற்றுவார் – உன்னை
வற்றாத நீருற்றாய் மாற்றுவார்

Nee Thedum Nimathiyai Enn Yesu நீ தேடும் நிம்மதியை என் இயேசு

 நீ தேடும் நிம்மதியை என் இயேசு தந்திடுவார்

நீ தேடும் விடுதலையை என் நேசர் தந்திடுவார்
நாசம் ஏதும் அணுகாமல் நேசர் உன்னை – காத்திடுவார்
நிற்பதும் நிலைப்பதும் என் தேவ கிருபையே – இதை
நீயும் இன்று மறந்திட்டாலே – நிம்மதி வாழ்வினில் இல்லையே

வருத்தப்படடு பாரம் சுமந்துவாழ்ந்திட்ட நாட்களெல்லாம்
வேதனை வியாகுலம் தீராத சோதனை
அஞ்சிடாதே அன்பர் இயேசு உன்னருகே – நிற்கின்றார்
அழைத்திடு அழைத்திடு ஆண்டவர் நிம்மதி தந்திடுவார்

கலங்காதே என் நண்பனே கண்ணீரை சிந்தாதே
உந்தனின் துக்கங்கள் சந்தோஷமாகுமே
உள்ளத்தில் அமைதியின்றி ஏங்கி நெஞ்சமே
நிம்மதி தந்திடும் இயேசுவை நம்பி வந்திடு

உலகத்தின் மேன்மை செல்வம் – ஒன்றுக்கும் உதவாது
உந்தனின் கஷ்டங்கள் அதினாலே தீராது
இயேசுசாமி ஒருவர் மட்டும் உன்னையும் இரட்சிப்பார்
நம்பி நீ வந்திடு நெஞ்சுக்கு நிம்மதி தந்திடுவார்

Neer En Belanum Enn Kedagamam நீர் என் பெலனும் என் கேடகமாம்

 நீர் என் பெலனும் என் கேடகமாம்

உம்மைத்தான் நம்பி இருந்தேன்
சகாயம் பெற்றேன் உதவி பெற்றேன்
பாடி உம்மை துதிப்பேன்

உம்மை போற்றுவேன் உம்மை உயர்த்துவேன்
உம்மை பாடுவேன் உம்மை ஆராதிப்பேன்
துதிகனமகிமைக்கு பாத்திரர்
இயேசு ராஜா நீரே

என் விண்ணபத்தின் சத்தத்தை கேட்டவரே
நன்றி நன்றி ஐயா
விடுவித்து என்னை மீட்டவரே
நன்றி நன்றி ஐயா

என்னை இரட்சித்து ஆசீர்வதித்தவரே
நன்றி நன்றி ஐயா
போசித்து என்னை உயர்தினீரே
நன்றி நன்றி ஐயா

Neer Illamal Vallvillai நீர் இல்லாமல் வாழ்வில்லை

 நீர் இல்லாமல் வாழ்வில்லை

உம்மை நினைக்காத வாழ்வில்லை
அன்பின் தெய்வமே அருமை இரட்சகரே

உம்மைப்போல மாறிவிட ஆசை
உலகத்தை நான் வெறுக்காமல் போச்சே
என்ன நான் செய்வேன் எதை
எனது அருமை இயேசுவே

உம்மைப் பிரிந்து நான் எங்கே போவேன்
ஒளியான மெய் தேவன் நீரே
உம்மை மறந்தே போனாள்
இருளில் பங்காடைவேனே

ஆசையும் இச்சையும் ஒழிந்து போகும்
ஆண்டவரே நீர் சொல்லி வைத்தீரே
அழியா உன் வழி பற்றி
அன்புடன் நானும் நடந்திடுவேன்

Neerae En Theivamae நீரே என் தெய்வமே! நீரே!

 நீரே என் தெய்வமே! நீரே! என் தஞ்சமே!

நீரின்றி நானில்லை என் இயேசுவே

எப்படி நான் பாடிடுவேன்!
என்ன சொல்லி துதித்திடுவேன்
நீரின்றி நானில்லை என் இயேசுவே

என்னை பேர் சொல்லி அழைத்தவர் நீரல்லவா
என் பேர் சொல்ல வைத்தவர் நீரல்லவா – இந்த
உலகத்தில் உன் பேரை சொல்லவா என்னை
அதற்காகத்தான் அழைத்தீரல்லவா

கள்ளன் என்றென்னைத் தள்ளாத என் தேவனே
கள்ளம் இல்லாத மணவாட்டி மணவாளனே
என்று வருவீரோ உம்மைக்காண ஏங்குகிறேன்
இந்த உலகத்தில் உமக்காக வாழுகிறேன்

நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்
நினையாத நேரத்தில் வருகின்றவர்
ஆயத்தம் உள்ளோரை அழைக்கின்றவர் – இந்த
அகிலத்தை இரட்சிக்கும் தேவனவர்

Neerae Vazhi Neerae நீரே வழி நீரே சத்தியம் நீரே ஜீவன்

 நீரே வழி நீரே சத்தியம் நீரே ஜீவன்

வேறு ஒரு தெய்வம் இல்லை நீரே தேவன்
விண்ணிலும் மண்ணிலும் மெய் நாமம் உந்தன் நாமமய்யா
உமக்கு நிகர் என்றும் நீர் தானய்யா

கல்லும் அல்ல மண்ணும் அல்ல கல்லால் ஓர் சிற்பம் அல்ல
ஜீவனுள்ள தேவன் என்றால் நீர்தானய்யா
ரூபங்கள் உமக்கில்லை சொரூபமும் உமக்கில்லை
ஆவியாய் இருக்கிறீர் ஆண்டவரே

உண்டானது எல்லாமே உம்மாலே உண்டானது
உம் நாமம் மகிமைக்கே உண்டாக்கினீர்
படைப்பு தெய்வம் அல்ல பார்ப்பதெல்லாம் தெய்வம் அல்ல
கர்த்தர் நீர் ஒருவரே கடவுளய்யா

எல்லாம் வல்ல தெய்வம் நீரே
எல்லையில்லாதவரே உம்மாலே ஆகாதது ஒன்றும் இல்லையே
வானம் உம் சிங்காசனம் பூமி உந்தன் பாதப்படி
நடப்பதெல்லாம் உம் விருப்பப்படி

Neerillaa Aaraadhanai நீரில்லா ஆராதனை ஆராதனை

 நீரில்லா ஆராதனை ஆராதனை அல்ல

நீரில்லா என் வாழ்க்கை ஒரு நல்வாழ்க்கையும் அல்ல

ஆராதிக்கும்போது உம் அங்கீகாரம் வேண்டும் – நான்
பாடல் பாடும்போது உம் பிரசன்னமும் வேண்டும்
உம்மை பார்க்கும்போது நீர் என்னை பார்க்க வேண்டும்
நான் மன்றாடிடும்போது நீர் மனதுருகி மனமிரங்க வேண்டும்
என் இதயமதின் இன்னல் மாற வேண்டும்

வைடூரியம் வேண்டாம் உம் வார்த்தை ஒன்றே போதும்
கோடா கோடி வேண்டாம் உம் கிருபை மட்டும் போதும்
சொந்தம் பந்தம் வேண்டாம் உம் சந்நிதானம் போதும்
நீர் மீண்டும் வரும்போது உந்தன் திருமுகத்தை தரிசிக்கவே வேண்டும்
நான் உமதருகில் என்றும் வாழ வேண்டும்

Wednesday, April 23, 2025

Nenjamellam Neerae Nirainthiruppir நெஞ்சமெல்லாம் நீரே நிறைந்திருப்பீர்

 நெஞ்சமெல்லாம் நீரே நிறைந்திருப்பீர் தேவா

எண்ணி மகிழ்வேனே உமது அன்பை
என்றும் மறவேனே உமது அன்பை

நீரோடை வாஞ்சிக்கும் மான்களைப் போலவே
கர்த்தரின் சமூகத்தைத் தேடிடுவேன்
காலையும் மாலையும் தேவனின் பிரசன்னம்
என்னை நிரப்பும் மகிமையே

எண்ணிலடங்காத நன்மைகள் எனக்கு
செய்தவரே உம்மைத் துதித்திடுவேன்
இராச்சாமத்திலும் விழிப்புடன் இருப்பேன்
நேசரின் வருகைக்காய் காத்திருப்பேன்

மன்னவரின் லோகம் நான் மலரடி சேர
என்னை வழிநடத்தும் உமது வேதம்
சொன்ன மொழியாவும் என்னில் நிறைவேறும்
சத்திய வார்த்தைகள் நிச்சயமே

Nesikkiren Ummaithaane Iyya நேசிக்கிறேன் உம்மைத்தானே ஐயா

நேசிக்கிறேன் உம்மைத்தானே ஐயா
நிலையில்லாத இந்த உலகத்திலே
நேசிக்கிறேன் உம்மைத்தானே ஐயா
உம்மைத்தானே இயேசையா

ஒவ்வொரு நாளும் எனது கண் முன்
உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன்
வலப்பக்கத்தில் இருப்பதனால்
நான் அசைக்கப்படுவதில்லை

உம்மையல்லாமல் வேறே விருப்பம்
உள்ளத்தில் இல்லையே
நிம்மதியே நிரந்தரமே என்
நினைவெல்லாம் ஆள்பவரே

ஐயா உம் தாகம் எனது ஏக்கம்
அடிமை நான் கதறுகிறேன்
என் ஜனங்கள் அறியணுமே
இரட்சகர் உம்மைத் தேடணுமே

உமது வேதம் எனது மகிழ்ச்சி
ஓய்வின்றி தியானிக்கின்றேன்
ஆற்றங்கரை மரமாக
அயராமல் கனி கொடுப்பேன்

Netru Indru Naalai Marathavare நேற்று இன்று நாளை மாறாதவரே

 நேற்று இன்று நாளை மாறாதவரே

காலம் மாறினாலும் மாறாதவரே

வாக்குத்தத்தம் கொடுத்தால் – அதை
நிறைவேற்றிடுவார்
நம்மைப் போல அல்ல – அவர்
கண்டதையும் சொல்ல

சொல்வதெல்லாம் உண்மை – அவர்
செய்வதெல்லாம் நன்மை
பொய்கள் கிடையாது – அவர்
செய்கை புரியாது

தாழ்பாள்களை முறித்தார் – வெண்கல
கதவினை உடைத்தார்
இன்றும் அதைச் செய்வார் – உன்னை
விடுவித்து காப்பார்

பாவம் நீங்கிப்போனதே – வாழ்வில்
விடுதலை வந்ததே
செய்ததெல்லாம் அவரே – இன்றும்
அதைச் செய்வாரே

Nilaiyaana Singasanam En Yesu நிலையான சிங்காசனம் என் இயேசு

 நிலையான சிங்காசனம்

என் இயேசு எனக்குத் தந்தார்
அவர் இருக்கின்ற உயரத்திலே
என்னை அவருடன் அமரச் செய்தார்

நான் பரிசுத்தவானாய் வாழ்வதற்காய்
இயேசு பாவமானார்
நான் பெலவான் என்று அழைக்கப்பட
இயேசு எனக்காக கைவிடப்பட்டார்

நான் செல்வந்தனாக வாழ்வதற்காய்
இயேசு ஏழையானார்
நான் ஆசீர்வாதமாய் வாழ்வதற்காய்
இயேசு எனக்காக சாபமானார்

நான் ஆரோக்கியமாக வாழ்வதற்காய்
இயேசு நொறுக்கப்பட்டார்
நான் பரலோக பாக்கியம் பெறுவதற்காய்
இயேசு எனக்காக உயிரைத் தந்தார்

Niraivaana Belanai Naan நிறைவான பலனை நான்

 நிறைவான பலனை நான் வாஞ்சிக்கிறேன்

குறைவுகள் எல்லாம் நிறைவாகுமே
நிறைவான தேவன் நீர் வருகையிலே

வாழ்க்கையில் குழப்பங்கள் குறைவுகள் வந்தாலும்
அழைத்தவர் நீர் இருக்க பயமே இல்ல
வாக்கு செய்தவர் மாறாதவர்
உம்மையே நம்பிடுவேன்

குறைவுகள் எல்லாம் நிறைவாகும்
நிறைவான தேவன் நீர் வருகையிலே

தாயை போல என்னை தேற்றுகிறீர்
ஒரு தந்தை போல என்னை சுமக்கின்றீர்
உங்க அன்பு பெரிதய்யா
உம்மை நம்பிடுவேன்

Oli Tharum Theebangal ஒளி தரும் தீபங்கள்

 ஒளி தரும் தீபங்கள்

சுடர் வீசும் தீபம் நாம்
கலங்கரை விளக்கைப் போல்
இயேசுவில் ஒளி பெறுவோம்

மலைமேல் ஜொலித்திடும்
மாநகர் போலவே
மண்ணகம் காணவே
ஒளியினை வீசுவோம்
ஆண்டவர் இயேசுவின்
உறவினில் நெருங்கிட
அணையாத ஜோதியாய்
சுடரை வீசுவோம்

இருளை நீக்கிட
ஒளியாய் வந்தவர்
அருள் நிறை ஒளியினை
மேதினில் வீசுவோம்
வார்த்தையைப் பிடித்துமே
சுடர்களைப் போலவே
எழும்பிப் பாரினில்
சுடரை வீசுவோம்

அழிவின் பாதையில்
கல்லறை சென்றிடும்
ஆயிரம் ஆயிரம்
தரிசனம் காணுவோம்
சுவிசேஷ ஒளியினை
யாவரும் கண்டிட
துணிந்து என்றென்றுமாய்
சேவையைச் செய்குவோம்

Onrumillamalae Ninra Ennai ஒன்றுமில்லாமலே நின்ற என்னை

 ஒன்றுமில்லாமலே நின்ற என்னை

கைப்பிடித்து நடத்தும் பேரன்பு
எந்தன் பெரும்குறைகள் கண்டபின்னும் – ஆ…ஆ…
நெஞ்சோடு சேர்க்கும் பேரன்பு

இந்த நல்ல தெய்வத்துக்கு நான்
என்ன செய்து நன்றி சொல்லுவேன் – ஆ
எந்தன் அற்ப ஜீவியத்தை நான்
உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம்

போன நாட்கள் தந்த வேதனைகள்
உம் அன்பு தான் என்று அறியவில்லையே
உம் சொந்தமாக்கவே, மாரோடு சேர்க்கவே
புடமிட்டு உருக்கினீர் என்னையும் நீர்

தெய்வ அன்பு என்ன உன்னதம்
இந்த நல்ல தெய்வத்துக்கு நான்
என்ன செய்து நன்றி சொல்லுவேன் – ஆ
எந்தன் அற்ப ஜீவியத்தை நான்
உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம்

ஆழ்மனத்தின் துக்கப்பாரமெல்லாம்
உம் தோளில் ஏற்றதை உணரவில்லையே
(தன்னந்தனிமையிலே, மனமொடிந்து போகையிலே
உம் ஜீவனைக் கொடுத்து ரட்சித்தீரே

தேவன் தானே என் அடைக்கலம்
ஒன்றுமில்லாமலே நின்ற என்னை
கைப்பிடித்து நடத்தும் பேரன்பு
எந்தன் பெரும்குறைகள் கண்டபின்னும் – ஆ…ஆ…
நெஞ்சோடு சேர்க்கும் பேரன்பு

இந்த நல்ல தெய்வத்துக்கு நான்
என்ன செய்து நன்றி சொல்லுவேன் – ஆ
எந்தன் அற்ப ஜீவியத்தை நான்
உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம்
உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம்.

Oru Kutram Kooda Seiyaadha ஒரு குற்றம் கூட செய்யாத

 ஒரு குற்றம் கூட செய்யாத ஒரே ஒரு தெய்வம்

இயேசு மட்டும் தான் இயேசு மட்டும் தான்
தன் எதிரிகளுக்காய் உயிரை கொடுத்த ஒரே ஒரு தெய்வம்இயேசு மட்டும் தான் இயேசு மட்டும் தான்
ஒரு குற்றம் கூட … ஒரு குற்றம் கூட
ஒரு குற்றம் கூட செய்யாத ஒரே ஒரு தெய்வம்இயேசு மட்டும் தான் இயேசு மட்டும் தான்தன் எதிரிகளுக்காய் உயிரை கொடுத்த ஒரே ஒரு தெய்வம்இயேசு மட்டும் தான் இயேசு மட்டும் தான்இயேசு மட்டும் தான் நம் இயேசு மட்டும் தான்இயேசு மட்டும் தான் நம் இயேசு மட்டும் தான்
எங்கும் நிறைந்த எல்லாம் அறிந்த எல்லாம் வல்ல தெய்வம்உலகத்தைப் படைத்தவர் வணக்கத்துக்குரியவர் ஒரே ஒரு தெய்வம்பச்சத்தண்ணிய பழரசமாக்கி பரவசப்படுத்திய தெய்வம்மேல் ஜாதி கீழ் ஜாதி வித்தியாசம் பாக்காத ஒரே ஒரு தெய்வம்ஒரு குற்றம் கூட …  ஒரு குற்றம் கூட
பாவம் இல்லாத மனிதரின் இதயத்தில் வாழும் சுத்த தெய்வம்பாவத்தை மன்னிக்கும் அதிகாரமுடைய ஒரே ஒரு தெய்வம்இலவசமாக நோயை போக்கிப் பேயை ஓட்டும் தெய்வம்கொதித்தெழுந்த கடலைக்கூட அடக்கி நிறுத்திய தெய்வம்ஒரு குற்றம் கூட … ஒரு குற்றம் கூட…
செத்துப் போன உடலுக்குள்ளே உயிரை வைத்த தெய்வம்ஆதரவில்லா அனாதைகட்கு அடைக்கலமான தெய்வம்கடலின் மீது தரையைப்போல நடந்த அதிசய தெய்வம்பூட்டப்பட்ட வீட்டுக்குளே கடந்து வந்த தெய்வம்ஒரு குற்றம் கூட … ஒரு குற்றம் கூட …
சிலுவையில் தன்னை அறைந்தவரைக்கூட மன்னித்த பெரிய தெய்வம்மரித்த பின்பும் உயிரோடு எழுந்த ஒரே ஒரு தெய்வம்முப்பத்துமூன்று கோடிகளுக்குள்ளே இப்படி இல்லை ஒரு தெய்வம்கையெடுத்து கும்பிடுவதற்கு பாத்திரமான தெய்வம்ஒரு குற்றம் கூட … ஒரு குற்றம் கூட …

Tuesday, April 22, 2025

Oruvan Yesuvil Anbaiyirunthaal ஒருவன் இயேசுவில் அன்பாயிருந்தால்

 ஒருவன் இயேசுவில் அன்பாயிருந்தால்

இயேசுவின் வார்த்தைகளை கைக்கொள்கிறான்
இயேசுவில் அன்பாயிராதவன்
இயேசுவின் போதனையை புறக்கணிக்கிறான்
உயிருள்ள வார்த்தைகளை புறக்கணிக்கிறான்

இறைவனால் உண்டானவன் இறைவனின்
வார்த்தைக்கு அர்த்தமுள்ள போதனைக்கு
அன்பின் அறிவுரைக்கு செவிசாய்க்கிறான்
சத்தியத்தை அறிந்தவன்
விடுதலை அடைகிறான்
உண்மையை உணர்ந்தவன்
துணிவோடு வாழ்கிறான்
வேதமில்லையேல் வெற்றியில்லையே
இயேசுவின் போதனை தான்
மோட்சம் செல்லும் பாதையாம்

தெய்வத்தின் வார்த்தையை மீறுகின்ற
பரம்பரை நம்பிக்கைகள் மூட மரபுகளை
இயேசு கிறிஸ்து வெறுக்கின்றாரே
கடவுளின் மனதினை புரிந்திடுவோம்
கடவுளின் விருப்பம் செய்திடுவோம்
கடவுளை தள்ளி அவர் வார்த்தையை மறுத்தால்
அந்த வார்த்தையையே நாம்மை நியாயம் தீர்க்கும்

மனிதனின் வார்த்தைக்கு கீழ்படிவதைவிட
கடவுளின் வார்த்தைக்கு
முக்கியத்துவம் கொடுத்து
கீழ்ப்படிந்து நடக்க கடவுள் சொன்னாரே
திருச்சபை போதகர் சொல்லித் தந்ததை
மறைநூல் வாசித்து ஆராய்வோம்
உண்மையை உணருவோம்
அறிந்தபின் திருந்துவோம்
உண்மை ஒருநாள் ஜெயிப்பது நிச்சயம்

Monday, April 21, 2025

Ovoru Manithanum En Nanban ஒவ்வொரு மனிதனும் என் நண்பன்

 ஒவ்வொரு மனிதனும் என் நண்பன்

ஒவ்வொரு மனிதனும் சகோதரன்
ஒவ்வொரு மனிதனும் சகோதரன்
என் சகோதரன் என் சகோதரன்

நோயில் தவிப்பவன் என் நண்பன்
ஆபத்தில் இருப்பவன் சகோதரன்
பாவத்தில் உழல்பவன் என் நண்பன்
சாபத்தில் வாழ்பவன் சகோதரன்
காரணம் அவனும் மனிதன்
இயேசு அவனையும் நேசிக்கின்றார்

அழகை இழந்தவன் என் நண்பன்
அறிவை இழந்தவன் சகோதரன்
ஆதரவிழந்தவன் என் நண்பன்
வறுமையில் வாழ்பவன் சகோதரன்
காரணம் அவனும் மனிதன்
இயேசு அவனையும் நேசிக்கின்றார்

சிறையில் வாழ்பவன் என் நண்பன்
தனிமையில் தவிப்பவன் என் சகோதரன்
ஊனமாய்ப் பிறந்தவன் என் நண்பன்
ஊக்கமிழந்தவன் சகோதரன்
காரணம் அவனும் மனிதன்
இயேசு அவனையும் நேசிக்கின்றார்

எந்த மதமானாலும் என் நண்பன்
எந்தக் குலமானாலும் சகோதரன்
எந்த நாட்டு மனிதராயினும் என் நண்பன்
எந்த மொழி பேசினாலும் சகோதரன்
காரணம் அவனும் மனிதன்
இயேசு அவனையும் நேசிக்கின்றார்

Paadum Paadal Yesuvukkaga பாடும் பாடல் இயேசுவுக்காக

 பாடும் பாடல் இயேசுவுக்காக

பாடுவேன் நான் எந்த நாளுமே
என் ராஜா வண்ண ரோஜா
பள்ளத்தாக்கின் லீலி அவரே

அழகென்றால் அவர் போல
யார் தான் உண்டு இந்த லோகத்தில்
வண்ண மேனியோனே எண்ணிப் பாடிடவே
என் உள்ளம் மகிழ்வாகுதே

அன்பினிலே என் நேசர்க்கே
என்றென்றுமே இணையில்லையே
என்னை மீட்டிடவே தன் ஜீவன் தந்தார்
என் நேசர் அன்பில் மகிழ்வேன்

தெய்வம் என்றால் இயேசுதானே
சாவை வென்று உயிர்த்தெழுந்தாரே
என் பொன் நேசரின் மார்பினில் சாய்ந்தோனாக
நான் பாடுவேன் பாமாலைகள்

Paar Potrum Venthan பார்போற்றும் வேந்தன்

 பார்போற்றும் வேந்தன் பாரினில் வந்து

பாலகனாக பிறந்தாரே

பிறந்தாரே இயேசு பிறந்தாரே
என்னை மீட்டிட வந்தாரே
பாரினில் பாலகனாய்
விண்ணில் மன்னவன்தான்
பிறந்தார் பிறந்தார் பிறந்தாரே

மாட்டுத் தொழுவத்தில் மந்தைகள் மத்தியில்
ஏழைக்கோலமாய் பிறந்தாரே
பாவியாம் என்னையுமே பரலோகம் சேர்த்திடவே
வந்தார் மரித்தார் உயிர்த்தாரே

தூதர்கள் துதிபாட சாஸ்திரிகள் தொழுதிட
எளியோனாய் எனக்காக வந்தாரே
மன்னாதி மன்னவனாய் மறுபடியும் வருவாரே
வருவார் இறைவாழ்வு தருவாரே

Paavi Enmelae Kirubaiyai பாவி என் மேலே கிருபையாய்

 பாவி என் மேலே கிருபையாய் இருந்தருளும்

பாவத்தை பாராத சுத்தக் கண்ணனே

தாழ்மையுள்ள யாவருக்கும்
கிருபையை அள்ளித் தருபவரே
மார்பில் அறைந்து ஓடிவந்தேன்
மன்னித்து என்னை ஏற்றருளும்

வெறுமை எல்லாம் மாற்றிடுமே
வறுமை எல்லாம் நீக்கிடுமே
முத்திரை மோதிரம் தந்திடுமே
முத்தங்களால் என்னை அணைத்திடுமே

ஒருவரும் சேரா ஒளியினிலே
வாசம் செய்திடும் உன்னதரே
என்னை உம்மில் இணைத்தீரே
அதுதான் உமது கிருபையே

Paavi Nee Odivaa பாவி நீ ஓடி வா

 பாவி நீ ஓடி வா – அன்பர்

இயேசு அழைக்கிறார்
பாவம் நீக்கிட வா – உந்தன்
பாரம் போக்கிட வா

உந்தனின் பாவத்தினால்
சிந்திய இரத்தத்தைப் பார்
தந்தை தம் அன்பினாலே – உன்னைப்
பந்தமாய்ப் பாதுகாப்பார்

வெண்ணங்கி நீ தரிக்க
முள்முடி சூட்டினாரே
தீராத பாவம் தீர்க்க – நீயும்
நேராக இன்றே வாராய்

ஆத்தும தாகம் தீர்க்க
ஆண்டவர் கூறுகின்றார்
தாகம் அடைந்தேன் என்று – நீயும்
தீர்ப்பாயோ அவர் தாகத்தை

Paraloga Santhosam Parinil பரலோக சந்தோஷம் பாரினில்

 பரலோக சந்தோஷம் பாரினில் வந்து

என்னைப் பரவசப்படுத்துகிறதே
பரமபிதா நீர் எந்தன் தந்தை
பாவி நான் உந்தன் பிள்ளை ஆனேன்

புத்திர சுவீகார ஆவியினால்
நீர் என்னைப் பிரித்தெடுத்தீர்
புரியாத உணர்வாலே எனைத் தேற்றுவீர்
அது உன்னத பெலன் அல்லவா

என் பிரிய இயேசு என் இனிய நேசர்
என்னோடு இருப்பார் என்றும்
ஜீவ ஒளியாக எந்தன் இருள் வாழ்வில் வந்தார்
தெய்வீகமான அன்பே

பரலோகம் எனக்குள் உருவாகுதே இங்கே
அந்தப் பரமனைக் கண்டுகொண்டேன்
அவர் திருவாய் மொழி எனக்கு அருமருந்தாகுமே தினமும்
பலகோடி துதி பாடுவேன்

Paralogil Vaazhum Parameswara பரலோகத்தில் வாழும் பரமேஷ்வரா

 பரலோகத்தில் வாழும் பரமேஷ்வரா

பரிசுத்தமாய் வாழும் பவித்ரேஷ்வரா
உலகிற்கு ஒளியான ஜோதீஷ்வரா
இயேசு ராஜேஷ்வரா மன சாந்தீஷ்வரா

பாவத்தை சுட்டெரிக்கும் அக்னீஷ்வரா
நோய் நீக்கி பேயோட்டும் வைத்தீஷ்வரா
பாவிக்கு மறுவாழ்வாம் ரக்ஷேஷ்வரா
காருண்யேஷ்வரா மகா ஈஷ்வரா

அனைத்துக்கும் மேலான சர்வேஷ்வரா
அகிலாண்டம் படைத்தாலும் பிரம்மேஷ்வரா
மரித்த பின்பு உயிர்த்தெழுந்த ஜீவேஷ்வரா
முக்தீஷ்வரா சர்வ சக்தீஷ்வரா

Parama Azhaippin Panthaya பரம அழைப்பின் பந்தய

 பரம அழைப்பின் பந்தய பொருளுக்காய்

நான் இலக்கை நோக்கி ஓடுகிறேன்
ஓடுகிறேன் நான் ஓடுகிறேன் என்
இயேசுவுக்காய் நான் ஓடுகிறேன்

அல்லேலுயா அல்லேலுயா
அல்லேலுயா அல்லேலுயா -2

இலாபமான அனைத்தையுமே
நான் நஷ்டமென்று கருதுகிறேன்
இயேசு ராஜவின் இந்த வேலைக்காக
மகிழ்ச்சியுடன் நான் ஓடுகிறேன்

எத்தனை தான் இடர்கள் வந்தாலும்
விசுவாசத்திலே நிலைத்திருப்பேன்
எனக்காக இயேசு நியமித்த
இந்த பாதையிலே நான் ஓடுகிறேன்

என் மணவாளன் இயேசு ராஜாவை
நான் காணவே வாஞ்சிக்கிறேன்
என் ஆசை எல்லாம் என் இயேசு தானே
அவர் பொன்முகம் தான் நான் பார்க்கணுமே

என் ஆவி ஆத்மா சரீரமெல்லாம்
என் இயேசுவுக்காய் அர்ப்பணிக்கிறேன்
நான் உயிர் வாழும் இந்த நாட்கள் எல்லாம்
இயேசுவுக்காய் நான் ஓடுகிறேன்

Saturday, April 19, 2025

Paranae En Ithayathil Vaarum பரனே என் இதயத்தில் வாரும்

 பரனே என் இதயத்தில் வாரும்

பரநோக்கம் நிறைவேற்ற வாரும்
அனுதினம் என்மனம் கழுவிடும்
அழகிய புதுமனம் தந்திடும்
பரிவுடன் பாவியை கண்டிடும் – என்
சுயமதை திருசலவை செய்திடும்

அதட்டிவிடும் நெஞ்சை
அகற்றிவிடும் நஞ்சை
புகுத்திவிடும் எனக்குள் பரமசிந்தை
பரிசுத்தம் கேட்கிறேன் உம் குழந்தை
அழுகிய சிந்தனை மங்கவே
மனதினுள் வசனங்கள் தங்கவே
அகமகிழ்ந்தெனதுள்ளம் பொங்கவே
அடைக்கலம் அருளுமே துங்கவே

திருக்குள்ளவன் மிஞ்சும்
கிறுக்குள்ளவன் கெஞ்சும்
கரத்துடனே உம்மிடம் கதறுகிறேன்
கிருபை கிடைக்கத்தானே பதறுகிறேன்
புவியதன் சோதனை குறையவே
பரமனின் போதனை நிறையவே
பகலதன் பிள்ளையாய் வளரவே
உலகினில் தீபமாய் ஒளிரவே

மயக்கத்திலே மனம்
கிரக்கத்திலே குணம்
உறக்கத்திலிருந்தென்னை எழுப்பிவிடும் – கெட்ட
உணர்ச்சிகள் அனைத்தையும் கொளுத்திவிடும்
அகமதின் கபடினை தள்ளவே
ஆவியின் கனிதனை அள்ளவே
அசுரனை அனுதினம் வெல்லவே
அவனியில் கிருபையைச் சொல்லவே

Parisutharae Engal Yesu Deva பரிசுத்தரே எங்கள் இயேசு தேவா

 பரிசுத்தரே எங்கள் இயேசு தேவா

நானிலத்தில் நீர் என்றும் ராஜா -2
உம்மைப் பாடுவதால்
என்னில் தோல்வியில்லை
உம்மைத் துதிப்பதினால் என்னில் குறைவேயில்லை -2
அல்லேலூயா -4

உம்மை உயர்த்துவதே எங்கள் நோக்கமையா
உம்மை பாடுவதே எங்கள் மேன்மையையா -2

நான் கொண்ட திட்டங்கள் சிறிதாயினும் ஐயா
எனக்காய் உம் திட்டங்கள் பெரிதல்லவோ -2
புழுதியிலிருந்தென்னை உயர்த்தினீரே
ராஜாக்களோடு அமர்த்தினீரே -2உந்தன் கிருபைகளை எண்ணி நான் பாடுவேன்
உந்தன் மகிமைதனை தினம் நான் ருசிப்பேன் -அல்லேலூயா

ஊழிய எல்லைகள் பெரிதாக்கினீர்
அதில் இராஜாக்கள் உதிக்கவும் உதவிசெய்தீர் -2
அறியாத ஜாதியை வரவழைத்தீர்
நீர் தந்த வாக்கினை நிறைவேற்றினீர் -2
உந்தன் கிருபைகளை எண்ணி நான் பாடுவேன்
உந்தன் மகிமைதனை தினம் நான் ருசிப்பேன் -அல்லேலூயா

வருத்தங்கள் பசிதாகம் ஏற்பட்டாலும்
எங்கள் விசுவாச கேடகம் வீழ்ந்திடாதே -2
நம்பினோர் நட்டாத்தில் கைவிட்டாலும்
என்னை காப்பற்ற நீர் உண்டு பயமில்லையே -2
உந்தன் கிருபைகளை எண்ணி நான் பாடுவேன்
உந்தன் மகிமைதனை தினம் நான் ருசிப்பேன் -அல்லேலூயா

Pasuthol Porthiya Puliyaa Nee பசுத்தோல் போர்த்திய புலியா நீ

 பசுத்தோல் போர்த்திய புலியா நீ

பயிரை மேயும் வேலியா
வெளியில் ஒரு குணம் கோயிலில் ஒரு குணம்
இதுதான் உந்தன் வாழ்க்கையா

அனலும் இல்லாமல், குளிரும் இல்லாமல்
வாழும் வாழ்க்கையில் பயனில்லை
தேவன்மேல் அன்பும் பிறன்மேல் அன்பும்
வாழ்க்கையில் இருந்தால் பயமில்லை

குடியை தேடி புகையை ஊதி
வாழ்நாள் முழுவதும் களியாட்டம்
ஆலயத்தில் மட்டும் மகா பரிசுத்தம்
பயங்கரமான பாவ குற்றம் – இது

வாயின் வஞ்சகம் வீண் வாக்குவாதம்
மனதில் முழுவதும் மாய்மாலம்
உன்னால் கெட்டுப்போகும் தேவனது நாமம்
கிறிஸ்துவுக்குன்னால் அவமானம்

ஆவியில் நிரம்பி பாஷைகள் பேசி
ஞாயிற்றுக்கிழமையில் ஆராதனை
அடுத்த நாளே பாவத்துக்கு அடிமை
தேவனுக்குன்னால் மனவேதனை

கண்கள் திறந்தால் வெளிச்சமுண்டாகும்
இருளிலிருந்து வெளியே வா
அத்துமா ரட்சிப்பு மிகவும் அவசியம்
இதயத்தை இன்று தேவனுக்கு தா

Payangara Parakiramam Seiyum பயங்கர பராக்கிரமம் செய்யும்

 பயங்கர பராக்கிரமம்

செய்யும் தேவன் இருப்பதினால்
அஞ்சிடேன் என்றுமே
ஜெயமே நான் அடைந்திடுவேன்

அவர் மா அன்பினால் என்னை மாற்றி தினம்
அதிசயம் காட்டி இணங்கச் செய்தார்
ஜெயித்திடுவேன் வீழ்த்திடுவேன்
தேவாவி என் மீது தங்குவார்

அவர் நல்லவரே அவர் வல்லவரே
சோதித்து அறியும் கர்த்தரிவர்
தேர்ச்சி என்றும் உண்டாகும்
காரியம் அவர் மீது சாட்டினேன்

அவர் நான் நம்பிடும் எந்தன் தேவனாவார்
உதவிகள் அவரால் கிடைத்திடுமே
உண்மையினை காத்திடுவேன்
எனக்காக யாவையும்செய்குவார்

அவர் வார்த்தை என்றும் எந்தன் உள்ளத்திலே
எரிந்திடும் தீ போல் பரவிடுதே
போதனையை பெற்றிடுவேன்
என்றென்றும் அவர் வாக்கை காப்பேன்

அவர் நல்நாமத்தை என்றும் நான் பாடுவேன்
அவரது கரமே எழும்பிடுமே
விடுதலையை அளித்திடுவார்
எந்நாளும் அவர் நாமம் போற்றுவேன்

Payapadamaaten Naan Payapadamaaten பயப்படமாட்டேன் நான் பயப்படமாட்டேன்

 பயப்படமாட்டேன் நான் பயப்படமாட்டேன்

இயேசு என்னோடு இருப்பதனால்
ஏலேலோ ஐலசா ஏலேலோ ஐலசா

உதவி வருகிறார் பெலன் தருகிறார்
ஒவ்வொரு நாளும் கூட வருகிறார்

காற்று வீசட்டும் கடல் பொங்கட்டும்
எனது நங்கூரம் இயேசு இருக்கிறார்

வலைகள் வீசுவோம் மீன்களைப் பிடிப்போம்
ஆத்துமாக்களை அறுவடை செய்வோம்

பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே
எல்லாவற்றையும் செய்ய பெலன் உண்டு

பரம அழைத்தலின் பந்தய பொருளுக்காய்
இலக்கை நோக்கி நாம் படகைஓட்டுவோம்

உலகில் இருக்கிற அலகையை விட
என்னில் இருப்பவர் மிகவும் பெரியவர்

Friday, April 18, 2025

Pentecostae Naazhlil Vandhadhu பெந்தெகொஸ்தே நாளில் வந்தது

 பெந்தெகொஸ்தே நாளில் வந்தது போல்

இறங்கி வாரும் பரிசுத்தாவியே
உமது சமூகம் சந்தோஷம் மகிழ்ச்சி
அக்கினியால் அபிஷேகியும் – எங்களை

அக்கினி மயமான நாவுகள் இறங்கி
பலத்த காற்று அடிக்கும் இடி முழக்கம்போலே
அஸ்திபாரம் அசைய வாரும் ஆவியே
என் தேவாலயம் நிரம்பி வழியவே

ஒரு மன ஐக்கிய ஆவியை ஊற்றும்
ஒரே இருதயமாக மாறவே
வல்லமையோடு வந்தமருமே – தேவ
அன்பினாலே எம்மை நிரப்புமே

பரிசுத்த பிரசன்னம் அசைவாடட்டும்
பரலோக மகிமை எம் கண்கள் காணட்டும்
ஆத்துமாக்களை வந்து ஆற்றித் தேற்றுமே
ஆனந்தப் பரவசத்தால்

Pithavae Arathikindrom Yesuve பிதாவே ஆராதிக்கின்றோம்

 பிதாவே ஆராதிக்கின்றோம்

இயேசுவே ஆர்ப்பரிக்கின்றோம்
ஆவியானவரே அன்பு செய்கின்றோம்

ஆராதிக்கின்றோம் ஆர்ப்பரிக்கின்றோம்
அன்பு செய்கின்றோம் – உம்மை

மகனாக தெரிந்து கொண்டீர்
மறுபடி பிறக்க வைத்தீர்
ராஜாக்களும் நாங்களே
ஆசாரியர்களும் நாங்களே

சகலமும் படைத்தவரே
சர்வ வல்லவரே
மகிமைக்கு பாத்திரரே
மங்காத பிரகாசமே

ஸ்தோத்திரமும் கனமும
வல்லமையும் பெலனும்
மாட்சிமையும் துதியும்
எப்போதும் உண்டாகட்டும்

பரிசுத்தர் பரிசுத்தரே
பரலோக ராஜாவே
எப்போதும் இருப்பவரே
இனிமேலும் வருபவரே

உமது செயல்களெல்லாம்
அதிசயமானவைகள்
உமது வழிகளெல்லாம்
சத்தியமானவைகள்

Pithave Potri Kumaaran Potri பிதாவே போற்றி குமாரன் போற்றி

 பிதாவே போற்றி

குமாரன் போற்றி
ஆவியே போற்றி
போற்றி போற்றி

யேகோவாயீரே போற்றி போற்றி
எல்லாமே பார்த்துக் கொள்வீர்

யேகோவாநிசியே போற்றி போற்றி
எங்களுக்கு வெற்றி தருவீர்

யேகோவா ஷாலோம் போற்றி போற்றி
சமாதானம் தருகின்றீர்

யேகோவா ராப்பா போற்றி போற்றி
எங்களுக்கு சுகம் தருவீர்

யேகோவா ஷம்மா போற்றி போற்றி
கூடவே இருக்கின்றீர்

Pothum Pothum Intha Ulagathin போதும் போதும் இந்த உலகத்தின்

 போதும் போதும் இந்த உலகத்தின் துன்பம்

வாரும் வாரும் எங்கள் இயேசுவே வாரும்
கல்லான மனங்களெல்லாம் கனிய செய்யும்
பொல்லாத மனிதர்களை நீரே மாற்றும்

உலகத்தின் பாவமே நிறைந்து வழியுது
தீமைகள் நாளக்கு நாள்பெருகி வருகிறது
எங்கும் அநீதி சுடர் விட்டு எரிகிறது
எங்களின் தெய்வமே எங்களை காருமே

ஆத்தும பாரத்தை எனக்கு தந்தீர் நீர்
ஆத்தம ஆதாயம் நானும் செய்திட
அழிந்திடும் மாந்தரை உம்மிடம் சேத்திட
உன்னதர் இயேசுவே வல்லமை தாருமே

அழிந்திடும் மாந்தர்கள் வெளிச்சம் காணட்டும்
மரிக்கும் மாந்தர்கள் ஜீவனை அடையட்டும்
தூயரின் இரத்தமே சாபத்தை போக்கட்டும்
தூய்மையாய் வாழ்ந்திட பெலனை ஈந்திடும்

Podhum Podhum Sodhanaigal போதும் போதும் சோதனைகள்

 போதும் போதும் சோதனைகள் போதுமே

வேண்டும் வேண்டும் ஆறுதலும் வேண்டுமே
தயாபரனே…

தயாபரனே இரங்கி வாருமே தயாபரனே

தப்பென்று தெரிந்தும் தப்பையே செய்கிறேன்
தப்பிக்க வழியில்லையா
தப்பே செய்யாத என் இயேசு தேவா
தப்பிக்க வழி செய்வீரா

கண்களின் இச்சைகொண்டேன் மாமிசத்தில் இச்சைக்கொண்டேன்
ஜீவனில் பெருமைகொண்டேன்
எப்படி இவைகளை மேற்கொள்வேனென்று
உம்மையே நோக்கி நின்றேன்

பாவத்தை செய்யும்போது பாவம் என்னை சூழும்போது
கர்த்தரை நான் மறக்கிறேன்
பாவத்தின் பலனை நான் அடையும்போதோ
கர்த்தரை நான் நினைக்கிறேன்

Wednesday, April 16, 2025

Pradhana Aasariyarae பிரதான ஆசாரியரே எங்கள்

 பிரதான ஆசாரியரே எங்கள்

பிரதான ஆசாரியரே

யெஷுவா -8
எங்கள் பிரதான ஆசாரியரே

ஒரே தரம் பலியிடப்பட்டதனால்
என்றென்றும் பூரணப்படுத்தினீரே
எங்கள் பிரதான ஆசாரியரே

இரக்கம் பெற சமயத்தில் சகாயம் பெற
கிருபாசனத்தண்டையில் தைரியமாய் வர
கிருபை செய்தவரே
எங்கள் பிரதான ஆசாரியரே

தோளிலே எங்களை சுமப்பவரே
இதயத்தில் எங்களை பொறிந்தவரே
நியாபக குறியாய் வைப்பவரே
எங்கள் பிரதான ஆசாரியரே

பாவம் இல்லாத ஆசாரியரே
என்றென்றும் வாழ்கின்ற ஆசாரியரே
உம்மாலே வெல்கின்றோம் ஆசாரியரே
எங்கள் பிரதான ஆசாரியரே

Puthiyulla Isthree Than Veetai புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டை கட்டுகிறாள்

 புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டை கட்டுகிறாள்

புத்தியில்லாதவளோ அதை இடித்து போடுகிறாள்
தேவனை முதலில் தேடுகிறாள்
வசனத்தை தினம் நாடுகிறாள்

கணவன் தலையில் கிரீடம் கீழ்ப்படிகிற மேடம்
இப்படிபட்ட மனைவிதான் புருஷனுக்கு வேணும்
இவள் பிள்ளைகளுக்கோ என்றும் பாக்யவதி ஆகிறாள்
கணவனுக்கு இவள் என்றும் குணசாலி ஆகிறாள்

நடக்கையிலே பணிவு வார்த்தையிலே கனிவு
கர்த்தரை இவள் நம்புவதால் வாழ்க்கையிலே மகிழ்வு
இவள் வாய் திறந்தால் ஞானம் விளங்க திறக்கிறாள்
சோம்பலின் அப்பத்தை புசிப்பதில்லை உழைத்து மகிழ்கிறாள்

பயபக்தியிலே வளர்ப்பு குடும்ப பொறுப்பில் சிறப்பு
வளரும் பெண்பிள்ளைகளுக்கு இவள் வாழ்க்கை நல்ல
இவள் நாணத்தினால் தன்னை அலங்கரித்துகொள்ளுகிறாள்
அடக்கம் அன்பு அமைதியாலே வெற்றி வாழ்க்கை வாழ்கிறாள்

Puthu Vaazhvu Vaazhnthiduvaen புது வாழ்வு வாழ்ந்திடுவேன்

 புது வாழ்வு வாழ்ந்திடுவேன்

புது வாழ்வு வாழ்ந்திடுவேன்
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
தேவனைப் பாடிடுவேன்

தேவன் தந்த வார்த்தையே
ஜீவன் வல்லமை தரும்
எந்நாளும் அதையே முற்றிலும் நம்பி
நல் வாழ்வு வாழ்ந்திடுவேன்

இதயத்தில் விசுவாசித்தேன்
என் வாயினால் அறிக்கை செய்தேன்
முப்பது அறுபது நூறத்தனையாய்
மகிழ்வோடு அறுத்திடுவேன்

என் தேவன் இவ்வாண்டிலே
பெரும் காரியம் செய்திடுவார்
என் மூலம் அவர் தம் நாமத்தினையே
மகிமைப்படுத்திடுவார்

Povi Aazaha Vanthavare புவியாள வந்தவரே

 புவியாள வந்தவரே

பாவ நாசம் நீக்கிடவே
இருள் யாவையுமே அகற்றி நீங்கவே
புதுவாழ்வு அளித்திட வந்தவரே

ஆயர் குடிலை தேடி வந்தோர்
அவனியை தீர்க்கும் பாலகன் இவரே
அதிசயம் செய்யும் தெய்வம் இவரே
அவனியிலுள்ளோரே வணங்கிடுவோம்

வேதம் கூறும் ஜோதி விளக்காய்
தன்னொளி வீசிட பூவினில் பிறந்தார்
இழந்ததை நாடி தேடி வந்தோர்
அற்புத பாலனைத் தொழுதிடுவோம்

மாளிகையில்லை மஞ்சமில்லை
ஏழைத் தொழுவில் இறைமகன் உதித்தார்
முன்னனை பாலகன் மேசியா இவரே
வல்லப் பிதாவை பணிந்திடுவோம்

Ragasiyamai Oru Varugai ரகசியமாய் ஒரு வருகை

 ரகசியமாய் ஒரு வருகை

அனைவரும் காணும் ஒரு வருகை
இரண்டுக்கும் நடுவே உபத்திரவம்
அதன் நடுவில் மகா உபத்திரவம்

சபையை தமக்கென எடுத்துக்கொள்ளவே
வருகிறார் இரகசியமாய்
சபையை தம்மோடு அழைத்து வருகிறார்
வெளியரங்கமாய்
நடுவிலே ஏழு வருடம் கடந்து போகுதே
அதில் மிகுதியாய் பாடுகள் புவியில்
தோன்றுதே

நொடிப்பொழுதினிலே வேறொரு ரூபமாய்
மாறிடுவோம் இரகசியமாய்
ஏழு வருடங்கள் கழித்து திரும்புவோம்
வெளியரங்கமாய்
கர்த்தருக்குள் மரித்துப்போனால் நல்லொரு
சாதனைதான்- இந்த
இரட்சிப்பை நீ அசட்டைசெய்தால் நரக
வேதனைதான்

ஆரவாரத்தோடும் தூதன் சத்தத்தோடும்
எக்காளதொனியோடும் இறங்கி வருகிறார்
யாரும் அறியா நேரம் இவைகள் நடந்தேறும்
காத்திருந்தால் உன்னை அழைத்துச் செல்லுவார்
இது ரகசிய வருகை
ஒரு அதிசய வருகை

தீர்க்கதரிசி சொன்ன இறுதி ஏழு வருடம்
அந்திகிறிஸ்து தன்னை உயர்த்திக் கொள்கிறான்
மூன்றரை ஆண்டு காலம் முடிந்த பின்னே அவனும்
பாழாக்கும் அருவருப்பை உயர்த்தி வைக்கிறான்
அதை கண்கள் யாவும் காணும்
அது முடிவு நெருங்கும் காலம்

இயேசுவே ரட்சகர் என்பதை நம்பி நீ
மன்றாடி மன்னிப்பை பெற்றுக்கொள் இன்றே நீ
குற்றங்கள் ஒப்புக்கொள் வாழ்க்கையை மாற்றிக்கொள்
வேறொன்றும் வேண்டாமே வேண்டுதல் கேட்பாரே
இன்றைக்கே வந்தாலும் ஆச்சரியம் இல்லையே
ஆயத்தமாக நீ நின்றாலே தப்பித்தாய்
சட்டென்று செல்லுவாய் கர்த்தரை சந்திப்பாய்
மேகத்தில் உன்னைப்போல் நம்பினோர் நிற்பாரே
இயேசுவை நம்பாமல் இரட்சிப்பு இல்லாமல்
மோட்சத்தை எண்ணாதே மோசமாய் போகாதே
யாக்கோபின் கஷ்டத்தை சந்திக்க நாடாதே
சாத்தானின் முத்திரை பெற்றுத்தான் மாளாதே
நித்திய அக்கினி உனக்கு வேண்டாமே
சத்திய வேதத்தின் வார்த்தையை நம்பியே வா

பரலோகம் ஒருபுறத்தில்
பாடுகள் புவியில் மறுபுறத்தில்
விழிப்புடன் இருந்தால் நீ பிழைத்திடுவாய்
வரப்போகும் ஆக்கினைக்கு தப்பித்துக்கொள்வாய்

 

Rathathaal Ennai Moodi இரத்தத்தால் என்னை மூடிக்

 இரத்தத்தால் என்னை மூடிக்கொள்ளும்

இரத்தத்தால் என்னை மறைத்துக் கொள்ளும்
இயேசுவின் இரத்தம் எங்கள் பாதுகாப்பு
இயேசுவின் இரத்தம் ஜெயம் தருமே

கல்வாரி இரத்தம் என் மேலேயுள்ளது
மின்னும் சுடரொளிப் பட்டையமே
சாத்தான் என்னை நெருங்காமல்
அக்கினி வேலி அடைத்துக் கொள்வேன்

எகிப்திலே சங்காரம் நடந்தபோது
இஸ்ரவேல் ஜனங்களை மீட்ட இரத்தம்
உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்த்த
தேவாட்டுக் குட்டி இயேசு இரத்தம்

பஸ்காவின் இரத்தம் பரிசுத்தமானது
வீடுகள் நிலைக்காலில் பூசிக் கொள்வோம்
எங்கள் குடும்பங்கள் சபைகளில் தெளித்துக்கொள்வோம்
பாளயம் முழுவதும் காவல் செய்வோம்

Sabaiyai Katukiraar சபையை கட்டுகிறார்

 சபையை கட்டுகிறார்

இயேசு சபையை கட்டுகிறார்
உண்மை கடவுள் இயேசு
தனது சபையை கட்டுகிறார்
தூய ஆவி சக்தியாலே
கட்டி எழுப்புகிறார்

மனிதனுடைய அறிவினாலே
சபையை கட்டவில்லை
புத்திசாலித்தனத்தினாலும்
சபையை கட்டவில்லை
ஆவியானவரின் வல்லமையாலே
சபையை கட்டுகிறார்
பாவிகளை மனம் மாற்றி
கட்டி எழுப்புகிறார்

மாயாஜால மந்திரங்களால்
சபையை கட்டவில்லை
மதவாத தந்திரங்களால்
சபையை கட்டவில்லை
நோயை நீக்கி பேயை ஓட்டி
சபையை கட்டுகிறார்
மனதுக்குள்ளே நிம்மதி
தந்து கட்டி எழுப்புகிறார்

தீவிரவாதம் காட்டி மிரட்டி
சபையை கட்டவில்லை
அரசாங்க அதிகாரத்தால்
சபையை கட்டவில்லை
நம்பிக்கை வைக்கும் மக்களை வைத்து
சபையை கட்டுகிறார்
சாட்சியாக நிற்போரை வைத்து
கட்டி எழுப்புகிறார்

Samathanam Venduma Jebam Seiyom சமாதானம் வேண்டுமா

 சமாதானம் வேண்டுமா ஜெபம் செய்வோம்

சங்கடங்கள் நீங்கவே ஜெபம் செய்திடுவோம்
நிலை மாற வேண்டுமா ஜெபம் செய்வோம்
மனம் மாற வேண்டுமா ஜெபம் செய்திடுவோம்

முழங்காலில் நாம் நின்றுவிட்டால்
முடியாது என்று ஒன்றுமில்லை
வாக்குதத்தம் நாம் பற்றிக்கொண்டால்
வாழ்வில் இனி ஒரு தோல்வியில்லை

வேதனைகள் நீங்கவே ஜெபம் செய்வோம்
வெற்றி வாழ்க்கை வாழவே ஜெபம் செய்திடுவோம்

எலியாவும் ஒரு மனிதன்தான்
ஜெபித்திட மழை மறைந்ததே
மீண்டும் அவன் வந்து ஜெபிக்கையில்
நின்ற மழை அன்று பொழிந்ததே

விசுவாசத்தோடு நாம் ஜெபம் செய்வோம்
கருத்தாக யாவரும் ஜெபம் செய்திடுவோம்

வானவரே விண்ணப்பம் செய்யும்போது
மானிடர் நாம் ஜெபிக்க தயங்கலாகுமோ
கற்றுத் தந்தார் நாமும் ஜெபித்திட – அவர்
சித்தப்படி என்றும் நடந்திட

மனத் தாழ்மையோடு நாம் ஜெபம் செய்வோம்
உயிர் உள்ள நாள் வரை ஜெபம் செய்திடுவோம்

Santhosam Santhosam Santhosame சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே

 சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே

இயேசுவின் பாதத்திலே சந்தோஷமே
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே
ஆண்டவரைத் துதிப்போம் எந்நாளுமே

உன்னதமானவர் பலத்தோடு
வாழும் நாளெல்லாம் சந்தோஷமே
உழைக்கும் உயர்வை அளிக்கும் தேவ
வல்லமை இருப்பதால் சந்தோஷமே

சர்வ வல்ல தேவன் இயேசு
நம்மோடு இருப்பாதால் சந்தோஷமே
சருக்கும் எதிரியை நொறுக்கும் தேவ
பட்டயம் இருப்பதால் சந்தோஷமே

கர்த்தாதி கர்த்தர் இயேசு தேவன்
கரத்தில் நாம் இருப்பதால் சந்தோஷமே
காக்கும் துயர் நீக்கும் இயேசு
நாமத்தைத் துதிப்பதால் சந்தோஷமே

Santhosamaayirunga Eppoluthum சந்தோஷமாயிருங்க – எப்பொழுதும்

 சந்தோஷமாயிருங்க  எப்பொழுதும்

சந்தோஷமாயிருங்க
உயர்வானாலும் தாழ்வானாலும்
சர்வ வல்ல தேவன் நம்மோடிருக்கிறார்

நெருக்கத்தின் நேரத்திலும்
கண்ணீரின் பாதையிலும்
நம்மைக் காண்கின்ற தேவன்
நம்மோடிருப்பதால் சந்தோஷமாயிருங்க

விசுவாச ஓட்டத்திலும்
ஊழியப் பாதையிலும்
நம்மை வழிநடத்தும் தேவன்
நம்மோடிருப்பதால் சந்தோஷமாயிருங்க

தோல்விகள் வந்தாலும்
நஷ்டங்கள் வந்தாலும்
நமக்கு ஜெயம் கொடுக்கும் தேவன்
நம்மோடிருப்பதால் சந்தோஷமாயிருங்க

என்னதான் நேர்ந்தாலும்
சோர்ந்து போகாதீங்க
நம்மை அழைத்த தேவன்
கைவிட மாட்டார் சந்தோஷமாயிருங்க

Senaigalin Karthar சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர்

 சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே

சேராபீன்கள் கேரூபீன்கள் வாழ்த்தும் பரிசுத்தர் பரிசுத்தரே
அல்லேலூயா யேகோவா அல்லேலூயா யேகோவா

பட்சிக்கும் அக்கினி பாவங்களைத் தண்டிக்கும்
பரிசுத்த தேவன் அவரே
அல்லேலூயா யேகோவா அல்லேலூயா யேகோவா

பயப்படுவோம் இயேசு நாமத்திற்கு
நாங்கள் நடுங்குவோம் அவர் வசனத்திற்கு
அல்லேலூயா யேகோவா அல்லேலூயா யேகோவா

தேவ மகிமை சூழட்டுமே
தேவ கிருபை தாங்கட்டுமே
அல்லேலூயா யேகோவா அல்லேலூயா யேகோவா

Senaigalin Karthare Nin சேனைகளின் கர்த்தரே நின்

 சேனைகளின் கர்த்தரே நின்

திருவிலம் அளவற இனிதினிதே

வானவானங்கள் கொள்ளாத
ஈன ஆன்மாவைத் தள்ளாத

திருவருளிலமே கணுறும் உணரும்
தெருளம்பகமே இனிதுறும் நிசமிது

ஈண்டடியார் கேட்டிடும் நின்வசனமினிதே இனிதே
இகபர நலமொளிர் இதமிகு பெயருள
எமதரசெனும் நய

புவியோர் பதிவான் புகநிதியே
புனருயி ருறுமுழுக் கருளினிதே
புதுவிடமே,புகுமணமே,புதுமதியே
புரிவொடு இனிதருள்

பேயடே புவி பேதை மாமிசம்
பேணிடாதடியாருனைப்
பேறு தந்தவனே யெனச்சொலி
பேணிடத்துணை ஈவையே
பேசருமுன்னந்தம் பேதைகளின் சொந்தம் பேதமிலானந்தம்
பிசகொழியே திடமளியே
பெருமலையினிலரு முயிர்தரும்

ஆலய மது நிறைவாக
அவைக் குறை வொழிந்தேக
அவரவருனதில மெனமனவிடர்சாக
அருளும் பொருளுந் தெருளும் செறிந்திடும்
ஆலய பர னேச
ஆசுக மது வீச
ஆரண மொழி பேச
ஆ புது எருசலையாம்
ஆலய மொரு நிலையாம்
அது நிக ரெது

Senaigalin Maa Karthar சேனைகளின் மா கர்த்தரவர்

 சேனைகளின் மா கர்த்தரவர்

யாக்கோபின் தேவனவர்
என்றும் உயர்ந்த அடைக்கலமே
என் நம்பிக்கையின் பெலனே

உணர்கிறாயா உணர்கிறாயா?
உண்மையை நீ உணர்கிறாயா?
உணர்கிறாயா உணர்கிறாயா?
உண்மையை உணர்கிறாயா?

அடைக்கலமே இனி உன் பெலனே
ஆபத்தில் அனுகூலமே
பூமி நிலைமாறி மலை சரிந்தும்
நீ அசைக்கப்படாய் உறுதி

சொல்லுவாயா சொல்லுவாயா?
எப்போதும் நீ சொல்லுவாயா?
சொல்லுவாயா சொல்லுவாயா?
எப்போதும் சொல்லுவாயா?

அமர்ந்திருந்து நீ அறிந்து கொள்வாய்
அவரே தேவனென்று
உனக்காரும் இல்லையே மேதினியில்
இது தாவீதின் அனுபவமே

அனுபவி நீ! அனுபவி நீ!
இது முதல் நீ அனுபவியே
அனுபவி நீ! அனுபவி நீ!
இது முதல் அனுபவியே