Friday, October 21, 2022

IRULELLAM VILAGUM NERAM - POOVELLAM SIRIKUDHU LYRICS

இருளெல்லாம் விலகும் நேரம் இதுதானோ
பழசெல்லாம் புதுசா மாறுது இது ஏனோ - 2
பூவெல்லாம் சிரிக்குது குளிர்காத்து அடிக்குது
மனசெல்லாம் இனிக்குது இது எதனால?
உன்னை என்னை படைச்ச ஆண்டவரே.. வந்து பிறந்தாரே
இம்மானுவேல் எப்போதுமே அவரே.. கூட இருப்பாரே - 2

ஒண்ணுத்துக்கும் உதவாத மாட்டுத்தொழுவம் போலிருந்தேன்
எனக்குள் அவர் பிறந்ததாலே உலகம் முழுசா தெரிஞ்சேனே - 2
தள்ளப்பட்ட கல்லான என்னை தம் அன்பாலே
நட்சத்திரமா வாழ வெச்சாரே.. அவர் வழிகாட்ட - 2
பூவெல்லாம் சிரிக்குது குளிர்காத்து அடிக்குது
மனசெல்லாம் இனிக்குது என் ராஜா பிறந்ததால் - 2

எங்கோ ஒரு மூலையில பெத்லகேம போலிருந்தேன்
இஸ்ரவேல ஆளும் ராஜா எனக்குள் பிறக்க குறிக்கப்பட்டேன் - 2
சின்னவன்ணு ஒதுக்கப்பட்ட என்னை அவர் நினைச்சாரு
பூமிக்கெல்லாம் வெளிச்சமா இருக்க முன் குறிச்சாரு - 2
பூவெல்லாம் சிரிக்குது குளிர்காத்து அடிக்குது
மனசெல்லாம் இனிக்குது என் ராஜா பிறந்ததால் - 2

No comments: